உலக பொருளாதாரம் மந்தநிலைக்கு சென்றுவிட்டது ; பன்னாட்டு நிதியம் அறிவிப்புஉலக பொருளாதாரம் மந்தநிலைக்கு சென்றுவிட்டது ; பன்னாட்டு நிதியம் அறிவிப்பு ...  வீட்டிலிருந்தே வரி வசூல் வீட்டிலிருந்தே வரி வசூல் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
வளர்ச்சி கணிப்புகளால் பங்கு சந்தை சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மார்
2020
04:49

மும்பை; வாரத்தின் முதல் நாளான நேற்று, பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன. கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருவதையடுத்து, அதன் தொடர்ச்சியாக, வங்கிகள் மற்றும் வாகன துறை பங்குகள் கடுமையாக விலை குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 1,375.27 புள்ளிகள் சரிந்து, வர்த்தகத்தின் இறுதியில், 28,440.32 புள்ளிகளில் நிலை பெற்றது. நேற்று மட்டும் சென்செக்ஸ், 4.61 சதவீதம் சரிவைக் கண்டது. இதைப் போலவே, தேசிய பங்குச் சந்தையின் நிப்டி, 379.15 புள்ளிகள் சரிந்து, வர்த்தகத்தின் இறுதியில், 8,281 புள்ளிகளில் நிலை பெற்றது. இது, 4.38 சதவீத சரிவாகும்.சென்செக்ஸ் பிரிவில், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் அதிக இழப்பை சந்தித்தது. இந்நிறுவன பங்குகள் கிட்டத்தட்ட, 12 சதவீதம் அளவுக்கு விலை சரிந்தன.

இதையடுத்து, எச்.டி.எப்.சி., டுவின்ஸ், டாடா ஸ்டீல், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், கோட்டக் பேங்க், மாருதி சுசூகி ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிவை கண்டன.மாறாக, நெஸ்ட்லே இந்தியா, டெக் மகிந்திரா, எச்.யு.எல்., ஆக்சிஸ் பேங்க் ஆகிய நிறுவன பங்குகள் அதிக லாபம் ஈட்டின.ஆசிய பங்குச் சந்தைகள் சரிவை கண்ட நிலையில், வாரத்தின் முதல் நாளான திங்களன்று, இந்திய பங்குச் சந்தைகளும் சரிவைக் கண்டன.

கச்சா எண்ணெய் விலை சரிவும் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தின.மேலும், பல தரநிர்ணய நிறுவனங்கள், இந்தியாவின் வளர்ச்சியை குறைத்து கணித்து அறிவித்தன. இதன் காரணமாக, வர்த்தகத்தின் பிற்பாதியில், சந்தையில் பங்குகளை விற்பனை செய்வது அதிகரித்தது. சந்தை இறங்குவதற்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்தது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)