பதிவு செய்த நாள்
03 ஏப்2020
01:07
சென்னை:மார்ச் மாத மின் கட்டணத்தை செலுத்த, இரண்டு மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என, குறு, சிறு நிறுவனங்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கானவை மட்டும் செயல்பட, அரசு அனுமதி அளித்துள்ளது.இந்நிலையில், மின் கணக்கீட்டு பணி மேற்கொள்ளப்படாமல், கடந்த மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே, வரும் மாதத்திற்கு செலுத்த, தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஆனால், தொழிற்சாலைகள் இயங்காத நிலையில், கடந்த மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே, தற்போது எப்படி செலுத்துவது என, குறு, சிறு நிறுவனங்கள் கேள்வி எழுப்பி உள்ளன.இது குறித்து, குறு, சிறு நிறுவனங்கள் தரப்பில் கூறியதாவது:குறு, சிறு நிறுவனங்கள், பிப்ரவரி மாதம் முழுமையாக செயல்பட்டன. அதற்கான மின் கட்டணம், மார்ச்சில் செலுத்தப்பட்டு விட்டது.
மார்ச் மாதத்தில், நிறுவனங்கள் முழுமையாக செயல்படவில்லை. நிறுவனங்கள் செயல்படாமல், மிகப் பெரிய தொகையை மின் கட்டணமாக, ஏப்., 20க்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது, எங்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, நிறுவனங்களுக்கு, மின் கட்டண சலுகை வழங்க வேண்டும் அல்லது கட்டணம் செலுத்த இரண்டு மாதம் அவகாசம் வழங்க வேண்டும்.இவ்வாறு, நிறுவனங் கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|