பதிவு செய்த நாள்
03 ஏப்2020
23:20
புதுடில்லி:இந்தியாவில், சில்லரை விற்பனை, மே மாதத்திலிருந்து பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்புகள் இருப்பதாக, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
'கேப்பில்லரி டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா வைரஸ் பாதிப்பால், குறுகிய காலத்தில், மிக அதிக பாதிப்பை சந்தித்துள்ளது, சில்லரை விற்பனை ஸ்டோர்கள். அரசு, ஊரடங்கை மேலும் நீட்டிக்காத நிலையில், மே மாதம் முதல் வாரத்திலிருந்து, மீண்டும் விற்பனை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கலாம்.
கடந்த மார்ச், 16ம் தேதி வரை, நுகர்வோர் சில்லரை விற்பனை, அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், பெரிய அளவில் பாதிப்பு எதையும் சந்திக்காமல் இருந்தது.இருந்தாலும், மார்ச், 17 முதல், 25ம் தேதி வரையிலான காலத்தில், விற்பனை, 46 சதவீதம் சரிந்துள்ளது.மேலும், ஒரு ஸ்டோருக்கு வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும், 55 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது.
நாடு முடக்கப்பட்டதை அடுத்து, இது, அடுத்து வரும் வாரங்களில் மேலும் குறையும் என, எதிர்பார்க்கலாம்.இந்த தொற்று பாதிப்பு முடிந்த பின், இந்திய சில்லரை விற்பனையாளர்கள், 'டிஜிட்டல்' முறை பயன் குறித்து புரிந்து கொள்வர்.நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பவர்கள், கடைகள் மூலமாக விற்பது என்றிருந்த எண்ணத்தை மாற்றி, வலைதளம் மூலமாகவும் விற்பனை செய்யும் முடிவுக்கு வருவர். இதன் மூலம், இப்போது இருப்பது போன்ற வணிகத்தை மூடும் நிலையை தவிர்க்க முயல்வர்.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|