பதிவு செய்த நாள்
04 ஏப்2020
23:22
மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, ஆறு மாத தொடர் உயர்வு சாதனைக்குப் பின், இரண்டு வாரங்களாக சரிவைக் கண்டது. அதன் பின், இப்போது மீண்டும் அதிகரித்துள்ளது.
மார்ச், 27ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, 47 ஆயிரத்து, 556 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, இந்திய மதிப்பில், 36.14 லட்சம் கோடி ரூபாய். இதற்கு முந்தைய வாரத்தில், இருப்பு, 46 ஆயிரத்து, 991 கோடி டாலராக இருந்தது. வெளிநாட்டு பண இருப்பு அதிகரித்திருப்பதை அடுத்து, அன்னிய செலாவணி இருப்பும் அதிகரித்துள்ளது.
இது குறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்து உள்ளதாவது:கடந்த, 20ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 1,198 கோடி டாலர் சரிவைக் கண்டு, 46 ஆயிரத்து, 991 கோடி டாலராக சரிந்தது. மார்ச், 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 48 ஆயிரத்து, 189 கோடி டாலராக இருந்தது.
தற்போதைய அதிகரிப்புக்கு, வெளிநாட்டு பண இருப்பு அதிகரித்தது காரணமாக அமைந்தது. வெளிநாட்டு பண மதிப்பானது, 256 கோடி டாலர் அதிகரித்து, 43 ஆயிரத்து, 966 கோடி டாலராக உயர்ந்தது. மேலும், மதிப்பீட்டு வாரத்தில், தங்கத்தின் இருப்பும் அதிகரித்து உள்ளது. தங்கத்தின் இருப்பு மதிப்பு, 303 கோடி டாலர் அதிகரித்து, 3,089 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, இந்திய ரூபாய் மதிப்பில், 2.35 லட்சம் கோடி ரூபாய்.இவ்வாறு, ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|