பதிவு செய்த நாள்
20 மே2020
11:20
புதுடில்லி: ஜெர்மனியை சேர்ந்த, ’ஜான் வில்ஸ்’ எனும் பிராண்டு காலணிகளை தயாரிக்கும் தொழிற்சாலை, சீனாவிலிருந்து, இந்தியாவுக்கு இடம் மாற உள்ளது.
வர்த்தகப் போர், கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பல வெளிநாட்டு நிறுவனங்கள், சீனாவிலிருந்து தங்கள் தொழிற்சாலைகளை வேறு இடங்களுக்கு மாற்றும் முயற்சியை துவங்கி உள்ளன. சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை, இந்தியாவுக்கு அழைக்கும் முயற்சியில் தொடர்ந்து மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.இதனை அடுத்து, ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், சீனாவிலிருந்து வெளியேறி, இந்தியாவில் தொழிற்சாலைகளை துவங்குவது குறித்து ஆலோசித்து வருகின்றன.
இந்நிலையில், ஜெர்மனியை சேர்ந்த, ’ஜான் வில்ஸ்’ பிராண்டு காலணிகளை தயாரிக்கும் நிறுவனம், அதன் சீன தொழிற்சாலையை, இந்தியாவுக்கு இடம் மாற்ற திட்டமிடுகிறது. இதனையடுத்து, புதிய தொழிற்சாலையை, உத்திரபிரதேசத்தில், லேட்ரிக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் இணைந்து துவக்க இருக்கிறது. இந்த தொழிற்சாலை, 30 லட்சம் ஜோடி காலணிகளை தயாரிக்கும் திறன் கொண்டதாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|