ஜியோவில் தொடர்ந்து குவியும் முதலீடுகள் ஜியோவில் தொடர்ந்து குவியும் முதலீடுகள் ...  அமேசானில் 50 ஆயிரம் பேருக்கு வேலை அமேசானில் 50 ஆயிரம் பேருக்கு வேலை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சந்தையின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2020
22:29

மும்பை:ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள், சந்தையின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத காரணத்தால், நேற்று பங்குச் சந்தைகள் சரிவை கண்டன.

சந்தையின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் இல்லாத காரணத்தாலும், வங்கி மற்றும் நிதி நிறுவன பங்குகள் விலை சரிவைக் கண்டதாலும், பங்குச் சந்தைகள் சரிந்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், நேற்று 260 புள்ளிகள் சரிந்தது. வர்த்தகத்தின் இடையே, 450 புள்ளிகள் வரை சரிந்து, பின், வர்த்தகத்தின் முடிவில், 260.31 புள்ளிகள் சரிவுடன், 30,672.59 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 0.84 சதவீத சரிவாகும்.இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், வர்த்தக இறுதியில், 67 புள்ளிகள் சரிந்து, 9,039.25 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 0.74 சதவீத சரிவாகும்.

நேற்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் பிரிவில், ஆக்சிஸ் பேங்க் அதிகபட்ச விலை சரிவை சந்தித்தது. இந்நிறுவன பங்குகள், 5 சதவீதம் அளவுக்கு சரிந்தது. இதையடுத்து, எச்.டி. எப்.சி., பஜாஜ் பைனான்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, எச்.டி.எப்.சி., பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க் ஆகிய நிறுவன பங்குகளின் விலைகளும் சரிந்தன.மாறாக, மகிந்திரா அண்டு மகிந்திரா, இன்போசிஸ், ஏஷியன் பெயின்ட்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட், டெக் மகிந்திரா ஆகிய நிறுவன பங்குகள் விலை உயர்வை சந்தித்தன.

முன்னதாக, ரிசர்வ் வங்கி, வட்டிவிகித குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. இருந்தபோதும், வங்கி துறையில், கடன்களை மறுசீரமைப்பது சம்பந்தமான எந்த நிவாரணத்தையும் ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை. இது, சந்தைக்கு ஏமாற்றமளித்தது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)