பதிவு செய்த நாள்
31 மே2020
23:09
பர்சையும், பணத்தையும் கவனமாக பாதுகாப்பது போல, டெபிட் கார்டையும் கவனமாக பாதுகாக்க வேண்டும். எனினும், எதிர்பாராமல், டெபிட் கார் தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். டெபிட் கார்டு தெரியாமல் தவற விட்டால் அல்லது தொலைத்திருந்து, கார்டு விஷமிகள் கையில் கிடைத்தால் தவறாக பயன்படுத்தப்படும் அபாயம் இருக்கிறது.
எனவே, கார்டு தவறிய உடன், வங்கிக்கு தகவல் தெரிவித்து, அதன் செயல்பாட்டை முடக்க வேண்டும்.வங்கி கிளைக்கு நேராக சென்று அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, கார்டை முடக்க கோரலாம். வங்கி இணையதளம் அல்லது நெட் பாங்கிங் வசதி மூலம் இதை செய்யலாம். இணையதளத்தில், கார்டு பகுதியை தேர்வு செய்து, முடக்குவதற்கான கோரிக்கையை சமர்பிக்கலாம்.
கார்டு முடக்கப்படுவது தொடர்பான தகவல் பதிவு செய்த மொபைல் எண்ணில் வருவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தேவை எனில், இந்த தகவலை வங்கிக்கு தெரிவித்து, ஆவணப்படுத்திக் கொள்ளலாம்.கார்டு திருடு போயிருக்கும் என சந்தேகித்தால், காவல்துறையில் புகார் செய்து முதல் தகவல் அறிக்கை வாங்கி வைத்துக் கொள்ளலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|