செலவு செய்வது மகிழ்ச்சியை தருகிறதா?செலவு செய்வது மகிழ்ச்சியை தருகிறதா? ...  தடை நீட்டிப்பால் வளர்ச்சி குறையும் தடை நீட்டிப்பால் வளர்ச்சி குறையும் ...
தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2020
21:45

புதுடில்லி:கடந்த மே மாதத்தில், நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடுமையான சரிவைக் கண்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில், நாடு முடக்கப்பட்டதை அடுத்து, தயாரிப்பு துறை, இத்தகைய சரிவைக் கண்டுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த, ‘ஐ.எச்.எஸ்., மார்கிட்’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின், மே மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுஉள்ளது.அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:

இந்தாண்டு, மே மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, ‘பி.எம்.ஐ.,’ குறியீடு, 30.8 புள்ளிகளாக சரிந்துள்ளது. இருப்பினும், ஏப்ரல் மாதத்தை விட இது சற்று அதிகமாகும். கடந்த ஏப்ரலில், உற்பத்தி வளர்ச்சி,w 27.4 புள்ளிகளாக இருந்தது.தொடர்ந்து, 32 மாதங்களாக உற்பத்தி வளர்ச்சி அதிகரித்து வந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில், கொரோனாவால், வரலாற்று சரிவு ஏற்பட்டது.‘பி.எம்.ஐ.,’ குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும்.

மே மாதத்தில், இக்குறியீடு, 30.8 புள்ளிகளுக்கு சரிந்ததன் மூலம், கடுமையான பாதிப்பை உணர்த்தியுள்ளது.சமீபத்திய இந்த தரவுகள், மே மாதத்தில் தயாரிப்புத்துறை வளர்ச்சி சரிவை உறுதிபடுத்தி உள்ளன. பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதை அடுத்து, ஏப்ரல் மாதத்தின் தொடர்ச்சியாக,மே மாதத்திலும் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் மாத நிலவரத்தை அடுத்து, நிறுவனங்கள் ஆள்குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளையும் எடுத்துள்ளன.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக, உலகளவில் எடுக்கப்படும் நடவடிக்கைகள், ஏற்றுமதியை பாதிப்பதாக அமைந்துள்ளன. இருப்பினும், இந்திய உற்பத்தியாளர்கள், இந்த ஆண்டு வளர்ச்சி குறித்து, மே மாத ஆய்வின் போது மிகுந்த நம்பிக்கையுடன் இருந்து உள்ளனர். வைரஸ் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டவுடன், வளர்ச்சிக்கு திரும்புவதற்கான எதிர்பார்ப்புகளுடன் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

தற்போது மே மாதத்திலும் சரிவு ஏற்பட்டிருப்பது, வணிகங்கள் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதில் எதிர்கொள்ளக்கூடிய சவால்களை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. தேவைகள் குறைந்துள்ளதோடி, தொற்று நோய் பிரச்னை எப்போது தீரும் என்பதும் நிச்சயமற்றதாக இருக்கிறது.

-எலியட் கெர், பொருளாதார நிபுணர், ஐ.எச்.எஸ். மார்க்கிட்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)