பதிவு செய்த நாள்
01 ஜூன்2020
21:49
புதுடில்லி:ஓட்டல்கள், உணவகங்கள் மற்றும் விருந்தோம்பல் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் ஆகியவை, இம்மாதம், 8ம் தேதி முதல் செயல்படலாம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளதை அடுத்து, இத்துறை சார்ந்த பங்குகள் விலை, நேற்று பங்குச் சந்தைகளில் உயர்வைக் கண்டன.
குறிப்பாக, ஓட்டல் துறையை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை, 19 சதவீதம் அளவுக்கு உயர்ந்தன.மும்பை பங்குச் சந்தையில், சாலட் ஓட்டல்ஸ் நிறுவன பங்குகள், 19.16 சதவீதமும்; இ.ஐ.எச்., அசோசியேட்டட் ஓட்டல்ஸ் பங்குகள், 13.96 சதவீதமும்; இந்தியன் ஓட்டல்ஸ் கம்பெனி நிறுவன பங்குகள், 11.38 சதவீதமும்; தாஜ் ஜி.வி.கே., ஓட்டல்ஸ் அண்டு ரிசார்ட்ஸ், 8.38 சதவீதமும் விலை உயர்வை சந்தித்தன.
லெமன் டிரீ ஓட்டல்ஸ் நிறுவன பங்குகள் விலையும், அதன் அதிகபட்ச விலை அதிகரிப்பு வரம்பை எட்டியது. இந்நிறுவன பங்குகள் விலை, 4.74 சதவீதம் அதிகரித்து, 18.80 ரூபாய் என்ற நிலையை தொட்டது.
கடந்த மார்ச், 25ம் தேதியிலிருந்து நாடு முடக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று, மத்திய உள்துறை அமைச்சகம், ஜூன், 8ம் தேதி முதல், ஓட்டல்கள் உணவகங்கள், விருந்தோம்பல் சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் ஆகியவை செயல்படலாம் என, அறிவித்தது. இது, நேற்று சந்தையில் பிரதிபலித்ததை அடுத்து, பல நிறுவன பங்குகள் விலை உயர்வை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|