பதிவு செய்த நாள்
01 ஜூன்2020
21:52
சென்னை:கொரோனா வைரஸ் தொற்றுக்கான போராட்டத்தில் பங்கேற்று பணியாற்றி வருபவர்களுக்கு பல சிறப்பு சலுகைகளையும் உதவிகளையும் பல்வேறு நிறுவனங்களும் அமைப்புகளும் வழங்கி கவுரவித்து வருகின்றன.
புதிய முயற்சிஇந்த வகையில், ‘ஏர் ஏசியா’ நிறுவனமும் டாக்டர்களுக்காக சிறப்பு சலுகையை வழங்கி கவுரவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடும் டாக்டர்களுக்காக, உள்நாட்டு போக்குவரத்தில், 50 ஆயிரம் இருக்கைகளை இலவசமாக, ‘ஏர் ஏசியா’ நிறுவனம் ஒதுக்கி உள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக, களத்தில் பணியாற்றும் டாக்டர்களை கவுரவிக்க, புதிய முயற்சி மேற்கொள்ளப் பட்டு உள்ளது. இதற்காக, உள்நாட்டு விமானங்களில், 50 ஆயிரம் இருக்கைகள், கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து பணியாற்றும் டாக்டர்களுக்காக, ஏர் ஏசியா சிவப்பு, ‘பாஸ்’ திட்டத்தில் இலவசமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த சிவப்பு பாஸை பெற விரும்பும் டாக்டர்கள், https://air.asia/GCs2R என்ற இணையதளத்தில், ஜூலை, 1 முதல் செப்., 30க்குள், தங்களது முகவரியையும், செல்ல வேண்டிய இடம் மற்றும் பயண தேதியையும் சமர்ப்பிக்கலாம். ஒரு வழிப் பயணம்ஜூன், 12 முதல் சிவப்பு பாஸ் விண்ணப்பங்கள் வழங்கப்படும். இந்த சிவப்பு பாஸ் உள்நாட்டு போக்குவரத்தில், ஒரு வழிப் பயணத்திற்கு செல்லுபடியாகும்.இவ்வாறு ஏர் ஆசியா நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|