ஜி.எஸ்.டி., வசூல் நிலவரம் ஜூன் மாதத்தில் அதிகரிப்புஜி.எஸ்.டி., வசூல் நிலவரம் ஜூன் மாதத்தில் அதிகரிப்பு ... சுற்றுச்சூழலைக் காக்க பாஸில் வாட்ச் நிறுவனத்தின் ஐடியா..! சுற்றுச்சூழலைக் காக்க பாஸில் வாட்ச் நிறுவனத்தின் ஐடியா..! ...
வருமானம் தரும் கேம்ஸ் ஸ்டார்ட் அப்கள்: பாரம்பரிய கேம்ஸ் ஆப் உருவாக்குவது எப்படி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2020
09:40

மதுரை: ஊரடங்கு முடிவுக்கு வரவில்லை. வீட்டுக்குள் முடங்கியவர்களின் அதீத பொழுதுபோக்காக தாயம், பல்லாங்குழி, சொட்டாங்கல், ஆடுபுலி ஆட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் உயிர்பெற்றுள்ளன. லுாடோ என்ற பெயரில் இளைஞர்கள் மத்தியில் தாயம் ஆன்லைனில் விளையாடப்படுகிறது. பரமபதம் விளையாட்டும் வெறும் பாம்புகள் வடிவில் விளையாடப்படுகிறது.பாரம்பரிய விளையாட்டுகளுக்கான ஸ்டார்ட் அப்களை நாம் உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடியும் பேசியுள்ளார்.இந்த விளையாட்டுகளை ஆன்லைனில் எப்படி உருவாக்குவது என வழிகாட்டுகிறார், பொருளாதார ஆலோசகர் சேதுராமன் சாத்தப்பன்.

அவர்கூறியது:இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துவோர் 75 கோடி. ஆன்லைன் கேம்ஸ் விளையாடுவோர் 25 கோடி. ஆண்டுதோறும் 40 சதவீதம் பேர் கேம்ஸ் ஆப் டவுன்லோடு செய்கின்றனர். இந்தியர்கள் தான் அதிகம் விளையாடுகின்றனர். கேம்ஸ் ஆப்களின் மூலம் உலகளவில் 7 லட்சத்து 50ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இந்தியாவில் அடுத்தாண்டு 7500 கோடி ரூபாயாக உயரும். மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது, இத்தொகை குறைவு தான். எதிர்காலத்தில் பிரமாதமான வளர்ச்சி இதில் உள்ளது.இந்தியர்கள் கண்டுபிடித்த செஸ் தான், டாப் 10 விளையாட்டுகளில் பிரபலமாக உள்ளது. தாயம், பல்லாங்குழி, ஆடுபுலிஆட்டம் போன்ற விளையாட்டுகளில் புது வடிவமைப்பை ஸ்டார்ட் அப்களில் கொண்டு வரலாம். விளையாட்டுகளை புதுமையாக வடிவமைக்கும் போது அவற்றை டவுன்லோடு செய்பவர்களும் அதிகமாவர். இதன் மூலம் வருமானம் அதிகரிக்கும். இந்த ஆன்லைன் விளையாட்டுகளை உருவாக்குவதற்கு கூகுள் அசெலேரட் ஆறுமாத பயிற்சி அளிக்கிறது.https://events.withgoogle.com/indie-games-accelerator/மூலம் விண்ணப்பிக்கலாம் என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)