பதிவு செய்த நாள்
02 ஜூலை2020
22:44
மும்பை:நடப்பு நிதியாண்டில், நாட்டின் வளர்ச்சி குறித்த தன் மதிப்பீட்டை மாற்றி அறிவித்துஉள்ளது, ‘கேர் ரேட்டிங்ஸ்’ நிறுவனம்.
கடந்த மே மாதத்தில், நாட்டின் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 1.5 –1.6 சதவீதம் அளவுக்கு
சரியும் என, இந்நிறுவனம் கணித்து அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது அதை மாற்றி, 6.4 சதவீதம் அளவுக்கு சரிவைக் காணும் என தெரிவித்துள்ளது.கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால், பொருளாதார
செயல்பாடுகள் தாமதமாகும் என்ற அடிப்படையில், மதிப்பீட்டை மேலும்குறைத்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துஉள்ளதாவது:ஜூலை மாதத்தில் கூட ஊரடங்குகள் விலக்கப்படாமல் இருப்பதால், இயல்பு நிலை ஏற்படுவது, மூன்றாவது அல்லது நான்காவது காலாண்டு வரை ஆகக் கூடும் என கருதப்படுகிறது.இதனால் நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 6.4 சதவீதம் அளவுக்கு சரியும் என கணிக்கப்படுகிறது.
கடந்த நிதியாண்டில் வளர்ச்சி, 4.2 சதவீதமாக இருக்கும். இது கடந்த, 10 ஆண்டுகளில்
குறைவானதாக இருக்கும். அடுத்த நிதியாண்டைப் பொறுத்தவரை, உருவாகும் சூழலை பொறுத்து அதன் போக்கில்தான் கணிக்க இயலும்.விருந்தோம்பல், பயணம், பொழுதுபோக்கு உள்ளிட்ட துறைகள் மீள, அதிக காலம் பிடிக்கும். வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு ஆகியவற்றால், பண்டிகை காலத்தில் செலவு செய்வது குறைவாகவே இருக்கும்.
கிராமப் புறங்களில் வருவாய் அதிகரித்தாலும், எதிர்பாராத இந்த சூழலில், குறைந்துவிட்ட நுகர்வு திறனை, ஈடு செய்வதாக அது இருக்காது.இவ்வாறு, ‘கேர் ரேட்டிங்ஸ்’ தெரிவித்துஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|