அன்னை அழைக்கிறாள்... செல்வோம் வாருங்கள்! அன்னை அழைக்கிறாள்... செல்வோம் வாருங்கள்! ...  என்.பி.எஸ்., கணக்கு துவக்க புதிய வழி என்.பி.எஸ்., கணக்கு துவக்க புதிய வழி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘மியூச்சுவல் பண்ட்’ முதலீட்டில் முத்திரை தாள் கட்டணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2020
22:35

ஜூலை 1 ம் தேதி முதல், அனைத்து விதமான பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களை வாங்கும் போது, முத்திரை தாள் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இ.டி.எப்., தவிர அனைத்து வகை மியூச்சுவல் பண்ட்களுக்கும் இது பொருந்தும்.


நிதி சாதனங்கள் பரிவர்த்தனைகள் மீதான முத்திரை தாள் கட்டணம், நாடு முழுவதும் ஒரே விதமாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. மியூச்சுவல் பண்ட் முதலீடு மீது, இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் வருமாறு:பங்குகள், பண்ட்கள்: முத்திரை தாள் கட்டணம், பங்குகள், கடன்சார் சாதனங்கள், பண்டகங்கள் மற்றும் அனைத்து வகை மியூச்சுவல் பண்ட்களுக்கும் பொருந்தும்.


மியூச்சுவல் பண்ட்களை பொருத்தவரை, புதிதாக வாங்கும் திட்டங்கள் மற்றும் மாதாந்திர முதலீட்டிற்கும் ( எஸ்.ஐ.பி.) இது பொருந்தும். திட்டங்களை மாற்றினாலும் பொருந்தும்.


கட்டண விகிதம்:


முத்திரை தாள் கட்டணத்தை ஒரு முறை செலுத்த வேண்டும். இந்த கட்டண விகிதம், முதலீடு மதிப்பில் 0.005 சதவீதம் என்பதால், 1 லட்சம் ரூபாய்க்கு, 5 ரூபாய் என, செலுத்த வேண்டியிருக்கும். ஒரு டிமெட் கணக்கில் இருந்து இன்னொரு கணக்கிற்கு மாற்றும் போது, பரிவர்த்தனை மதிப்பில், 0.15 சதவீதம் செலுத்த வேண்டும்.

செலுத்தும் வழி:


மியூச்சுவல் பண்ட்களை வாங்கும் போது, மற்ற தொகையுடன், முத்திரை தாள் கட்டணமும், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களால் கழித்துக்கொள்ளப்படும். தனியே செலுத்த வேண்டிய தேவையில்லை. வாங்குபவர் மட்டும் செலுத்த வேண்டும். எஸ்.ஐ.பி., முதலீட்டிற்கும் இதே முறையில் பிடித்தம் செய்யப்படும்.

தாக்கம் என்ன?



முத்திரை தாள் கட்டணம் மிகவும் குறைவான தொகை என்பதால், முதலீட்டாளர்களுக்கு அதிக தாக்கம் இருக்காது. அதிலும் நீண்ட கால முதலீடு எனில், தாக்கம் சொற்பமாகவே இருக்கும். எனவே, இலக்குகளுக்கு ஏற்ப முதலீட்டை தொடர்வதே நல்லது.சரியான நிதி: நீண்ட கால முதலீட்டிற்கு அதிக பாதிப்பு இருக்காது என்றாலும், அடிக்கடி நிதியை மாற்றி முதலீடு செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் பரிவர்த்தனைக்கான கட்டணம் உண்டு என்பதால், சரியான நிதியில் முதலீடு செய்வது நல்லது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)