ஐந்தாவது நாளாக  சந்தை உயர்வு ஐந்தாவது நாளாக சந்தை உயர்வு ...  பங்கு வெளியீட்டுக்கு வரும் கிளாண்டு பார்மா நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வரும் கிளாண்டு பார்மா நிறுவனம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீட்டு தேதி அறிவித்தது, ‘ரோசாரி பயோடெக்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2020
23:25

புதுடில்லி:‘ரோசாரி பயோடெக்’ நிறுவனத்தின், புதிய பங்கு வெளியீடு, அடுத்த வாரத்தில் இருக்கலாம் என, சந்தை வட்டாரங்களில் கூறப்பட்டு வந்த நிலையில், பங்கு வெளியீட்டுக்கான தேதியை இந்நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

ரோசாரி பயோடெக் நிறுவனம், ஜூலை, 13ம் தேதி, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதாக அறிவித்துள்ளது. மேலும், ஒரு பங்கின் விலை, 423 – 425 ரூபாயாக இருக்கும் என்றும் தெரிவிக்க பட்டு உள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் போது, நிறுவனர்களின், 1.05 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.மேலும், 50 கோடி ரூபாய்க்கு, புதிய பங்குகளும் விற்பனை செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு முன், 150 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகள் வெளியிடப்படும் என பரவலாக பேசப்பட்டு வந்தது.ஏற்கனவே, தனிப்பட்ட பங்கு ஒதுக்கீட்டின் மூலம், 100 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. 23.53 லட்சம் பங்குகளை, மலபார் இந்தியா பண்டு நிறுவனம், ஆக்சிஸ் மியூச்சுவல் பண்டு நிறுவனம், சுந்தரம் மியூச்சுவல் பண்டு நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு ஆகிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்து நிதி திரட்டப்பட்டுள்ளது.

இந்த பங்கு வெளியீட்டின் மூலம், 496 கோடி ரூபாய் திரட்டப்பட இருக்கிறது.கடந்த நான்கு மாதங்களாக, எந்த ஒரு புதிய பங்கு வெளியீடும் மேற்கொள்ளப்படாத நிலையில், சிறப்பு ரசாயனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, ரோசாரி பயோடெக், தைரியமாக முதல் அடியை எடுத்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச், 5ம் தேதியன்று, ‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் அண்டு பேமென்ட் சர்வீசஸ்’ நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வந்தது. அதன் பிறகு, வேறு எந்த நிறுவனமும் வரவில்லை.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)