மீட்சியை காணத் துவங்கியிருக்கும் நுகர்பொருள் தயாரிப்பு துறை மீட்சியை காணத் துவங்கியிருக்கும் நுகர்பொருள் தயாரிப்பு துறை ...  சீன நிறுவனமல்ல மறுக்கும், 'ஜூம்' சீன நிறுவனமல்ல மறுக்கும், 'ஜூம்' ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இந்தியாவின் பெரிய பலம் அன்னிய செலாவணி இருப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2020
23:26

புதுடில்லி:நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 3 சதவீதம் அளவுக்கு குறையும் என, 'பேங்க் ஆப் அமெரிக்கா செக்யூரிட்டீஸ்' நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, அனைத்து பொருளாதார ஆய்வறிக்கைகளும், நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி விகிதத்தை குறைத்து அறிவித்து வருகின்றன. ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல நிறுவனங்கள், வளர்ச்சியை குறைத்து அறிவித்துள்ளன.சில ஆய்வறிக்கைகள், 7 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி சரியும் என தெரிவித்துள்ளன. இந்நிலையில், 'பேங்க் ஆப் அமெரிக்கா செக்யூரிட்டீஸ்' நாட்டின் வளர்ச்சி, 3 சதவீதம் அளவுக்கு குறையும் என அறிவித்துள்ளது.

இது குறித்து, இந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், கொரோனா பரவல் காரணமாக, 3 சதவீதம் அளவுக்கு குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் மாத மத்தியிலிருந்து, பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் துவங்கிவிடும் என்ற அடிப்படையில், இவ்வாறு கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை சிக்கல் மேலும் நீடித்தால், வளர்ச்சி, 5 சதவீதம் அளவுக்கு சரிவைக் காணும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, நிறுவனத்தின் இந்திய பொருளாதார நிபுணர் இந்திரனில் சென் குப்தா மேலும் கூறியதாவது:ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், நாடு முழுமையாக முடக்கப்பட்டதை அடுத்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3 சதவீத புள்ளிகள் அளவுக்கு, அவை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, தாக்கம் மாதத்திற்கு, 1 சதவீத புள்ளியாக குறைந்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய பலமாக இருப்பது, அதன் அன்னிய செலாவணி இருப்பு. கடந்த சில மாதங்களில் இது, அரை லட்சம் கோடி டாலர் என்பதை தாண்டி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)