சீன நிறுவனமல்ல மறுக்கும், 'ஜூம்' சீன நிறுவனமல்ல மறுக்கும், 'ஜூம்' ... ஜூலை 21ம் தேதி ஒன்பிளஸ் நார்ட் வெளியீடு; ரசிகர்கள் மகிழ்ச்சி ஜூலை 21ம் தேதி ஒன்பிளஸ் நார்ட் வெளியீடு; ரசிகர்கள் மகிழ்ச்சி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீட்டுக்கு வரும் கிளாண்டு பார்மா நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2020
22:39

புதுடில்லி:கிளாண்டு பார்மா நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ’செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.

ஐதராபாதை சேர்ந்த, கிளாண்டு பார்மா நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக விண்ணப்பித்துள்ளது.இந்த புதிய பங்கு வெளியீட்டின் போது, 1,250 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளை விற்பனைக்கு வெளியிட உள்ளது. மேலும், நிறுவனர்கள் வசம் இருக்கும், 3.4 கோடி பங்குகளையும் விற்பனைக்கு விடுக்க இருக்கிறது.

சீனாவை சேர்ந்த, ’போசன் பார்மா’ நிறுவனத்தின் வசம், இந்நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகள் உள்ளன.இந்த பங்கு வெளியீட்டின்போது, போசன் பார்மா வசம் இருக்கும் பங்குகளில், 1.94 கோடி பங்குகளும், ’கிளாண்டு செல்சஸ் பயோ கெமிக்கல்ஸ்’ வசம் இருக்கும், 1 கோடி பங்குகளும் விற்பனைக்கு வர இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கிளாண்டு பார்மா நிறுவனத்தின் இந்த புதிய பங்கு வெளியீட்டின் மதிப்பு, 5 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என, கூறப்படுகிறது.சீன நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய நிறுவனம் ஒன்று, சந்தையில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவது, இதுதான் முதல் முறையாகும்.

கிளாண்டு பார்மா நிறுவனம், பி.வி.என். ராஜூ என்பவரால், 1978ம் ஆண்டு துவக்கப்பட்ட தாகும். 2017ல், போசன் பார்மா நிறுவனம் இந்நிறுவனத்தின், 74 சதவீத பங்குகளை கையகப்படுத்தியது.இந்நிறுவனத்தின் தயாரிப்புகள், உலகளவில், 60 நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன.சீன நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும், இந்திய நிறுவனம் ஒன்று, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவது, இதுதான் முதல் முறையாகும்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)