பதிவு செய்த நாள்
12 ஜூலை2020
14:20
இந்திய ஆட்டோமொபைல் தொழில் துறையில் பாதுகாப்பிற்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகிறது. குறைந்த விலையுடைய சிறிய ரக கார்கள் முதல் பெரிய சொகுசு கார்கள் வரை அனைத்திலும் பாதுகாப்பு முதன்மை தேவையாக கருதப்படுகிறது.
இதற்கு காரணம் இந்திய ஹைவே சாலைகளில் அடிக்கடி நடக்கும் விபத்துக்கள். குடும்பத்துடன் காரில் ஹைவேயில் பயணிக்கும் குடிமக்கள், பாதுகாப்பாக வீடு போய்ச்சேர இந்த பாதுகாப்பு அம்சங்கள் காரில் பொருத்தப்படுகின்றன. தற்போது இந்திய கார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் கார்களின் பாதுகாப்பு, தரக்கட்டுப்பாடு அமைப்புகளால் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது.
இவற்றை பின்பற்றினாலே இந்த கார்கள் விற்பனைக்கு அனுமதிக்கப்படும். எனவே கார் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பாதுகாப்பு அம்சங்களை வாரி வழங்குகின்றன. இவற்றில் குறிப்பாக ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், இரண்டு ஏர்பேக்குகள் உள்ளிட்டவை தற்போது விற்பனையாகும் கார்களில் கட்டாயமாக்கப்பட்டு உள்ளன. இதனால் எதிர்பாரா விபத்துகளிலிருந்து கார் பயணிகள் தப்பமுடியும்.
இந்திய கார் மாடல்களில் மிகவும் பாதுகாப்பான கார்கள் எனப் பெயர் பெற்ற கார்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
குளோபல் நியூ கார் சேஃப்டி அசஸ்மெண்ட் ப்ரோகிராம் என்கிற அமைப்பு கார் பாதுகாப்பு சோதனை நடத்தி 5 ஸ்டார் ரேட்டிங் வழங்கி வருகிறது.
இதில் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 என்ற கார் இந்தியாவில் மிகப் பாதுகாப்பான கார் என்ற பெயரை பெற்றுள்ளது. 5 ஸ்டார் ரேட்டிங்கில் நான்கு ஸ்டார்களை பெற்ற பாதுகாப்பான கார்.
இதுதவிர டாடா அல்ட்ராஸ் மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய கார்களும் 5 ஸ்டார்கள் பெற்றுள்ளன. குழந்தைகள் பாதுகாப்பில் இந்த இரு கார்களும் முறையே 3 ஸ்டார்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
டாடா டியாகோ, டாட்டா டைகர் மற்றும் பாக்ஸ்வேகன் போலோ ஆகிய கார்கள் நான்கு ஸ்டார்களைப் பெற்றுள்ளன. இவையும் குழந்தைகள் பாதுகாப்பில் மூன்று ஸ்டார்களைப் பெற்றுள்ளன.
மஹிந்திரா மராசோ, ஹோண்டா அமேஸ், டொயோட்டா கேடிஎஸ், மாருதி சுசுகி விட்டாரா மற்றும் டாட்டா ஜஸ்ட் ஆகிய கார்கள் ஐந்துக்கு நான்கு ஸ்டார்கள் பெற்றுள்ளன. ஆனால் மேற்கண்ட இந்த கார்கள் குழந்தைகள் பாதுகாப்பில் இரண்டு ஸ்டார்களை பெற்று பின்தங்கியுள்ளன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|