பதிவு செய்த நாள்
12 ஜூலை2020
23:29
இதுவரை இல்லாத அளவுக்கு வட்டி விகிதம் குறைந்துள்ள நிலையில், வீட்டுக்கடன் பெற ஏற்ற காலம் இது என, வல்லுனர்கள் கருதுகின்றனர்.
சொந்த வீடு வாங்க திட்டமிட்டு உள்ளவர்களுக்கு, நல்ல செய்தியாக வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொது துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. ஒரு சில வீட்டுக்கடன்களுக் கான வட்டி விகிதம், 7 சதவீதத்திற்கும் குறைவாக அமைந்துள்ளது.
கடந்த பதினைந்து ஆண்டுகளில் நிலவும் மிகவும் குறைந்த வட்டி விகிதமாகும் இது. கிரெடிட் ஸ்கோர் அதிகம் உள்ளவர்களுக்கு வங்கிகள் குறைந்த விகிதத்தில் கடன் வழங்க தயாராக உள்ளன.ஏற்ற நேரம்வட்டி விகிதம் குறைந்துள்ள சூழல், வீட்டுக்கடன் பெறுவதற்கான பொருத்தமான நேரமாக அமைந்துள்ளதாக வல்லுனர்கள் கருதுகின்றனர். வரும் காலத்தில் இதைவிட சிறந்த நேரம் அமைய வாய்ப்பில்லை என்பதால், சொந்த வீடு வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்கின்றனர்.
வருமானம் சீராக இருந்து, தேவையான முன்பணம் கையில் இருந்தால், இப்போது வீட்டுக் கடன் பெற முயற்சிக்கலாம் என்கின்றனர். முதல் முறை வீடு வாங்குபவர்களுக்கு இது அதிகம் பொருந்தும்.பெரும்பாலான வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதம், 7 சதவீதம் எனும் அளவில் இருப்பதால், இது அரிதான வாய்ப்பு என கருதுகின்றனர். எனவே அணுகூலமான நிதி நிலையை பெற்றிருப்பவர்கள், தற்போதுள்ள வாய்ப்புகளை தீவிரமாக பரிசீலித்து முடிவெடுக்கலாம் என்கின்றனர்.
அதே நேரத்தில், வட்டி விகிதம் மட்டுமே வீட்டுக்கடன் பெறுவதற்கான அடிப்படையாக அமைந்துவிடக்கூடாது என்றும் எச்சரிக்கின்றனர். தொடர்புடைய மற்ற அம்சங்களையும் பரிசீலிக்க வேண்டும்.கட்டிய வீடுகள்வட்டி விகிதம் தவிர, கடன் வழங்கும் வங்கிகளின் தன்மை, இதர கட்டணங்கள் உள்ளிட்ட அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். வங்கிகள் வழங்கும் வட்டி விகிதத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். மிகச்சிறந்த வட்டி விகிதத்தை பெற வாடிக்கையாளர்கள் தேவையான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். \
\உதாரணமாக, வலுவான,‘கிரெடிட் ஸ்கோர்’ இருப்பதை உறுதி செய்து கொண்டால், வங்கி அதிகாரிகளிடம் வட்டி விகிதம் தொடர்பாக மேலும் தீர்மானமாக பேச முடியும். கடன் தொகை அளவும், வட்டி விகிதத்தை தீர்மானிப்பதில் ஒரு அம்சமாக இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
எனினும், ஒருவருடைய வருமானம், இடர் தன்மை ஆகிய அம்சங்களுக்கு ஏற்ப கடன் அளவு அமைவது நல்லது.மேலும், பணத்தை திரும்பச்செலுத்துவதற்கான அம்சங்களும் சிறந்ததாக அமைந்திருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். செயல்முறை கட்டணம், பதிவு கட்டணம் உள்ளிட்டவற்றையும் மனதில் கொள்ள வேண்டும். வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் கடன் தகுதியை அதிகரிப்பதற்கான அம்சங்களிலும் கவனம் செலுத்துவது நல்லது. தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.
வீட்டுக்கடன் பெறுவது என, தீர்மானிக்கும் போதே, பொருத்தமான வீட்டை தேர்வு செய்வதற்கான ஆய்வையும் மேற்கொண்டிருக்க வேண்டும். தற்போதைய சூழலில், கட்டி முடிக்கப்பட்டிருக்கும் வீடுகளை வாங்குவது ஏற்றதாக இருக்கும் என, வல்லுனர்கள் கருதுகின்றனர். இதன் மூலம், குடியிருப்பு திட்டம் தாமதமாவதால் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கலாம். கொரோனா முடக்கத்தால் கட்டுமான பணிகள் பாதிக்கப் பட்டுள்ளதால் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்குவது ஏற்றதாக அமையும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|