பதிவு செய்த நாள்
13 ஜூலை2020
23:35
புதுடில்லி:ஐ.ஆர்.எப்.சி., எனும், ‘இந்திய ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வர உள்ளது.
இது குறித்து, நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்த ஆண்டு இறுதிவாக்கில், ஐ.ஆர்.எப்.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டை நடத்த, மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.இந்த பங்கு வெளியீட்டின் மூலம், 500 முதல், 1,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்டவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
இந்திய ரயில்வேயை மேம்படுத்துவதற்காக, மூலதன சந்தைகளிலிருந்து நிதியை திரட்டும் முயற்சியில், ஐ.ஆர்.எப்.சி., இறங்க உள்ளது.கொரோனா தொற்று குறைந்து, நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்த பின், தேவைகள் அதிகரித்திருக்கும் நிலையில், இந்த பங்கு வெளியீட்டை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.எனவே, புதிய பங்கு வெளியீடு, அக்டோபர்- – -டிசம்பர் காலாண்டில் இருக்கும் என, எதிர்பார்க்கலாம்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|