பதிவு செய்த நாள்
13 ஜூலை2020
23:44
புதுடில்லி:பிணைகள் எதுவும் தேவைப்படாத கடனை வாங்குவதற்காக, வங்கிகளை நாடி குறு, சிறு, நடுத்தர நிறுவன அதிபர்கள் அதிகம் பேர் வருவதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாக, தர மதிப்பீட்டு நிறுவனமான, ‘கேர் ரேட்டிங்ஸ்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் தெரிவித்து உள்ளதாவது:ஆய்வில் பங்கேற்றவர்களில் கிட்டத்தட்ட, 70 சதவீதம் பேர் கடன் வாங்க, வங்கிகளை அணுகி இருப்பதாக தெரிவித்து உள்ளனர். இவர்கள், பிணை தேவைப்படாத அல்லது அரசு கடன் உத்தரவாதம் அளிக்கும் வகையிலான திட்டத்தின் கீழ், கடனை வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர், 1 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே, கடன் வாங்க விருப்பம் கொண்டிருக்கின்றனர்.கணக்கெடுப்புஇப்படி கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களில், இதுவரை, மூன்றில் ஒரு பகுதியினருக்கு, வங்கிகள் கடன் வழங்கி இருப்பதும் கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், கடன் வாங்குவதற்கு, 8 முதல், 9 சதவீதம் வரை செலவு பிடிப்பதாக, பெரும்பாலான கடனாளிகள் தெரிவித்துள்ளனர்
.இந்த ஆய்வு, இரு வாரங்களாக, கடந்த ஜூன், 23ம் தேதி முதல், ஜூலை 7ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு துறைகளை பிரதிபலிக்கும் வகையிலான, 345 பேரிடம், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், வங்கிக் கடனை தாமதமாக செலுத்துவதற்காக கொடுக்கப்பட்ட அவகாசத்தை பயன்படுத்தி உள்ளனர்.
வைரஸ் பரவலை தடுக்க நாடு முடக்கப்பட்டதால், மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதாக, 60 சதவீதத்தினருக்கும் மேற்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.மூன்றில் ஒருவர், கடந்த மூன்று மாதங்களில், வருவாயை, 50 சதவீதத்துக்கும் அதிகமாக இழந்திருப்பதாக தெரிவித்து உள்ளனர். இருப்பினும், நான்கில் ஒருவர் மட்டுமே, ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாகதெரிவித்துள்ளனர்.
மாற்றம்
மேலும், கிட்டத்தட்ட பாதி பேர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான வரையறையை அரசு மாற்றி அமைத்ததை வரவேற்றுள்ளனர்.சீனாவுக்கு எதிரான மனநிலை, புதிய வணிகங்களிடம் எந்த ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வின் மூலம், குறு, சிறு, நடுத்தர நிறுவன அதிபர்கள், வட்டியை தள்ளுபடி செய்வது, கடன் செலுத்த அளிக்கப்பட்டிருக்கும் அவகாசத்தை அதிகரிப்பது, கடனை மறுசீரமைப்பது, வங்கி மற்றும் அரசாங்கத்திடமிருந்து நிதி உதவிகள், மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றுக் கான கட்டணத்தில் சலுகைகள் ஆகியவற்றை எதிர்பார்ப்பது தெரிய வந்துள்ளது.
ஆய்வின்படி, 65 சதவீதத்துக்கும் அதிகமானோரின் வணிகம், பழைய இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு, இன்னும், 12 மாதங்கள் வரை ஆகும் என, எதிர்பார்ப்பது தெரிய வந்துள்ளது. மேலும், பாதிக்கும் மேற்பட்டவர்கள், அடுத்த ஆறு மாதங்களில், வணிக நிலையில் முன்னேற்றம் ஏற்படக்கூடுமென கருதுவதாக தெரிவித்துள்ளனர்.இவ்வாறு, ‘கேர் ரேட்டிங்ஸ்’ தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|