‘பென்ஷன்’ திட்டத்தில் புதிய வசதி அறிமுகம்‘பென்ஷன்’ திட்டத்தில் புதிய வசதி அறிமுகம் ...  ‘முத்ரா சிசு’ கடனுக்கு 2 சதவீத வட்டி மானியம் ‘முத்ரா சிசு’ கடனுக்கு 2 சதவீத வட்டி மானியம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி கடனுக்கு படையெடுக்கும் குறு, சிறு, நடுத்தர நிறுவன அதிபர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
23:44

புதுடில்லி:பிணைகள் எதுவும் தேவைப்படாத கடனை வாங்குவதற்காக, வங்கிகளை நாடி குறு, சிறு, நடுத்தர நிறுவன அதிபர்கள் அதிகம் பேர் வருவதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாக, தர மதிப்பீட்டு நிறுவனமான, ‘கேர் ரேட்டிங்ஸ்’ தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்நிறுவனம் தெரிவித்து உள்ளதாவது:ஆய்வில் பங்கேற்றவர்களில் கிட்டத்தட்ட, 70 சதவீதம் பேர் கடன் வாங்க, வங்கிகளை அணுகி இருப்பதாக தெரிவித்து உள்ளனர். இவர்கள், பிணை தேவைப்படாத அல்லது அரசு கடன் உத்தரவாதம் அளிக்கும் வகையிலான திட்டத்தின் கீழ், கடனை வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர், 1 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே, கடன் வாங்க விருப்பம் கொண்டிருக்கின்றனர்.கணக்கெடுப்புஇப்படி கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களில், இதுவரை, மூன்றில் ஒரு பகுதியினருக்கு, வங்கிகள் கடன் வழங்கி இருப்பதும் கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், கடன் வாங்குவதற்கு, 8 முதல், 9 சதவீதம் வரை செலவு பிடிப்பதாக, பெரும்பாலான கடனாளிகள் தெரிவித்துள்ளனர்

.இந்த ஆய்வு, இரு வாரங்களாக, கடந்த ஜூன், 23ம் தேதி முதல், ஜூலை 7ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு துறைகளை பிரதிபலிக்கும் வகையிலான, 345 பேரிடம், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், வங்கிக் கடனை தாமதமாக செலுத்துவதற்காக கொடுக்கப்பட்ட அவகாசத்தை பயன்படுத்தி உள்ளனர்.

வைரஸ் பரவலை தடுக்க நாடு முடக்கப்பட்டதால், மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதாக, 60 சதவீதத்தினருக்கும் மேற்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.மூன்றில் ஒருவர், கடந்த மூன்று மாதங்களில், வருவாயை, 50 சதவீதத்துக்கும் அதிகமாக இழந்திருப்பதாக தெரிவித்து உள்ளனர். இருப்பினும், நான்கில் ஒருவர் மட்டுமே, ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாகதெரிவித்துள்ளனர்.

மாற்றம்

மேலும், கிட்டத்தட்ட பாதி பேர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான வரையறையை அரசு மாற்றி அமைத்ததை வரவேற்றுள்ளனர்.சீனாவுக்கு எதிரான மனநிலை, புதிய வணிகங்களிடம் எந்த ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வின் மூலம், குறு, சிறு, நடுத்தர நிறுவன அதிபர்கள், வட்டியை தள்ளுபடி செய்வது, கடன் செலுத்த அளிக்கப்பட்டிருக்கும் அவகாசத்தை அதிகரிப்பது, கடனை மறுசீரமைப்பது, வங்கி மற்றும் அரசாங்கத்திடமிருந்து நிதி உதவிகள், மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றுக் கான கட்டணத்தில் சலுகைகள் ஆகியவற்றை எதிர்பார்ப்பது தெரிய வந்துள்ளது.
ஆய்வின்படி, 65 சதவீதத்துக்கும் அதிகமானோரின் வணிகம், பழைய இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு, இன்னும், 12 மாதங்கள் வரை ஆகும் என, எதிர்பார்ப்பது தெரிய வந்துள்ளது. மேலும், பாதிக்கும் மேற்பட்டவர்கள், அடுத்த ஆறு மாதங்களில், வணிக நிலையில் முன்னேற்றம் ஏற்படக்கூடுமென கருதுவதாக தெரிவித்துள்ளனர்.இவ்வாறு, ‘கேர் ரேட்டிங்ஸ்’ தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)