18 ஆண்டுகளில் முதன் முறையாக உபரி நிலைக்கு வந்த வர்த்தகம் 18 ஆண்டுகளில் முதன் முறையாக உபரி நிலைக்கு வந்த வர்த்தகம் ...  புதிய முதலீடுகளை ஈர்த்ததில் தமிழகத்துக்கு முதலிடம் புதிய முதலீடுகளை ஈர்த்ததில் தமிழகத்துக்கு முதலிடம் ...
எச்.சி.எல்., தலைவர் பதவி ரோஷ்னி நாடார் ஏற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2020
22:51

புதுடில்லி:எச்.சி.எல்., நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து, ஷிவ் நாடார் விலகியுள்ளார். இதையடுத்து, இவரது மகள், ரோஷ்னி நாடார் அப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

ஷிவ் நாடார் தலைவர் பதவியிலிருந்து இறங்கி விட்டபோதும், அவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நீடிப்பார். மேலும், தலைமை திட்ட அதிகாரியாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்.சி.எல்., நிறுவனம், நேற்று அதன் முதல் காலாண்டு அறிக்கையை வெளியிட்டது.


கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், இந்நிறுவனத்தின் நிகர லாபம், 31.7 சதவீதம் அதிகரித்து, 2,925 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நிறுவனத்தின் வருவாய், 8.6 சதவீதம் அதிரித்து,17 ஆயிரத்து, 841 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டின் ஜூன் மாத காலாண்டில், 16 ஆயிரத்து, 425 கோடி ரூபாயாக இருந்தது.

இருப்பினும், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், வருவாய், 18 ஆயிரத்து, 590 ரூபாயாக அதிகரித்திருந்தது.இந்நிலையில், நிறுவனம் அடுத்து வரும் மூன்று காலாண்டுகளில், 1.5-_ 2.5 சதவீதம் அளவுக்கு வருவாயில் வளர்ச்சியை காணும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், ஒரு பங்குக்கு, 2 ரூபாய் என, டிவிடெண்டையும் எச்.சி.எல்., அறிவித்துள்ளது.ஜூன் காலாண்டு நிலவரப்படி, எச்.சி.எல்., நிறுவனத்தில், 1.5 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள்.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)