பதிவு செய்த நாள்
17 ஜூலை2020
22:51
புதுடில்லி:எச்.சி.எல்., நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து, ஷிவ் நாடார் விலகியுள்ளார். இதையடுத்து, இவரது மகள், ரோஷ்னி நாடார் அப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
ஷிவ் நாடார் தலைவர் பதவியிலிருந்து இறங்கி விட்டபோதும், அவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நீடிப்பார். மேலும், தலைமை திட்ட அதிகாரியாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்.சி.எல்., நிறுவனம், நேற்று அதன் முதல் காலாண்டு அறிக்கையை வெளியிட்டது.
கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், இந்நிறுவனத்தின் நிகர லாபம், 31.7 சதவீதம் அதிகரித்து, 2,925 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நிறுவனத்தின் வருவாய், 8.6 சதவீதம் அதிரித்து,17 ஆயிரத்து, 841 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டின் ஜூன் மாத காலாண்டில், 16 ஆயிரத்து, 425 கோடி ரூபாயாக இருந்தது.
இருப்பினும், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், வருவாய், 18 ஆயிரத்து, 590 ரூபாயாக அதிகரித்திருந்தது.இந்நிலையில், நிறுவனம் அடுத்து வரும் மூன்று காலாண்டுகளில், 1.5-_ 2.5 சதவீதம் அளவுக்கு வருவாயில் வளர்ச்சியை காணும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், ஒரு பங்குக்கு, 2 ரூபாய் என, டிவிடெண்டையும் எச்.சி.எல்., அறிவித்துள்ளது.ஜூன் காலாண்டு நிலவரப்படி, எச்.சி.எல்., நிறுவனத்தில், 1.5 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள்.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|