பதிவு செய்த நாள்
06 ஆக2020
23:05
மும்பை:வட்டிவிகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யாவிட்டாலும், பொருளாதார மீட்சிக்கு, தேவையெனில், வட்டி குறைப்பில் ஈடுபடும் என, ரிசர்வ் வங்கி அறிவித்ததை தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தைகள் நேற்று உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையின், சென்செக்ஸ், வர்த்தகத்தின் இடையே, 558 புள்ளிகள் அதிகரித்து, வர்த்தகத்தின் இறுதியில், 362.12 புள்ளிகள் உயர்வுடன், 38025.45 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 0.96 சதவீத உயர்வாகும்.இதேபோல், தேசிய பங்குச் சந்தையின், நிப்டி குறியீடும், 98.50 புள்ளிகள் அதிகரித்து, 11200.15 புள்ளிகளில் நிறைவு பெற்றது. இது, 0.89 சதவீத அதிகரிப்பாகும்.
நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் பிரிவில், டாடா ஸ்டீல் பங்குகள் அதிக விலை உயர்வை கண்டன. இந்நிறுவன பங்குகள் விலை, 4 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. இதை அடுத்து, இன்போசிஸ், பஜாஜ் பைனான்ஸ், டி.சி.எஸ்., எச்.சி.எல்.,டெக், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், டெக் மகிந்திரா ஆகிய நிறுவன பங்குகளின் விலையும் உயர்ந்தன.
மாறாக, பார்தி ஏர்டெல், மகிந்திரா அண்டு மகிந்திரா, எல் அண்டு டி., ஆக்சிஸ் பேங்க் ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிந்தன.ரிசர்வ் வங்கியின் சமநிலையான அணுகு முறையை சந்தை வரவேற்றதன் விளைவாக, பல நிறுவன பங்குகள் விலை அதிகரித்துள்ளன என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|