பதிவு செய்த நாள்
11 ஆக2020
22:39
புதுடில்லி,:உலகளவிலான பொருட்கள் ஏற்றுமதியில், 5 சதவீத பங்களிப்பையும்; சேவைகள் ஏற்றுமதியில், 7 சதவீத பங்களிப்பையும், 2025ல் அடைவதை இலக்காக கொண்டு அரசு செயல்பட வேண்டும் என, இந்திய தொழிலக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில், நாட்டின் பொருட்கள் ஏற்றுமதி, 313 பில்லியன்டாலராக அதாவது, கிட்டத்தட்ட, 23.48 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. இது உலக பொருட்கள் ஏற்றுமதியில், 1.67 சதவீதமாக உள்ளது. சேவைகள் ஏற்றுமதியை பொறுத்தவரை, 3.54 சதவீதமாக உள்ளது.இந்நிலையில், இந்திய தொழிலக கூட்டமைப்பான, சி.ஐ.ஐ., நாட்டின் ஏற்றுமதிக்கான மறு பரிசீலனை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது குறித்து, சி.ஐ.ஐ., டைரக்டர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி கூறியதாவது:கொரோனா பரவல், உலக வர்த்தகத்தில் கடுமை யான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, இது அரசும் தொழில் துறையும் இணைந்து, உள்நாட்டுஉற்பத்தியை வலுப்படுத்த மிகவும் ஏற்ற சமயமாகும்.பல நாடுகள் தங்கள் வர்த்தக உத்திகளை மாற்றியமைப்பதையும், அவற்றின் இறக்குமதியை பன்முகப்படுத்துவதையும் கவனித்து வருகிறோம்.
இந்நிலையில், விலை குறைந்த, தரமான பொருட்கள் கிடைக்கும் மாற்று இடமாக இந்தியா உருவாக வேண்டும். ஏற்றுமதியை அதிகரிக்க முயற்சிகள் தேவைப்படும், 10 பகுதிகளை அறிக்கையில் தெரிவித்திருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.எளிதாக தொழில் செய்வது எனும் திட்டத்தை சீரமைத்து, போட்டித் தன்மையை மேம்படுத்தும் முயற்சிகளை தலைமை செயலர் மட்டத்திலான கண்காணிப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் சி.ஐ.ஐ., ஆலோசனை தெரிவித்துள்ளது.
போட்டித் தன்மையை வலுப்படுத்தவும், தரச் சான்றிதழ்கள் வழங்கும் வசதிகளை ஏற்படுத்தவும் போதுமான நிதி அவசியம் என்றும் சி.ஐ.ஐ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|