பார்ச்சூன்  இடம் பிடித்த இந்திய நிறுவனங்கள் பார்ச்சூன் இடம் பிடித்த இந்திய நிறுவனங்கள் ...  தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி ஜூனில் 16.6 சதவீதம் சரிவு தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி ஜூனில் 16.6 சதவீதம் சரிவு ...
ஏற்றுமதி இலக்கை அதிகரிக்கணும் தொழிலக கூட்டமைப்பு கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2020
22:39

புதுடில்லி,:உலகளவிலான பொருட்கள் ஏற்றுமதியில், 5 சதவீத பங்களிப்பையும்; சேவைகள் ஏற்றுமதியில், 7 சதவீத பங்களிப்பையும், 2025ல் அடைவதை இலக்காக கொண்டு அரசு செயல்பட வேண்டும் என, இந்திய தொழிலக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டில், நாட்டின் பொருட்கள் ஏற்றுமதி, 313 பில்லியன்டாலராக அதாவது, கிட்டத்தட்ட, 23.48 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. இது உலக பொருட்கள் ஏற்றுமதியில், 1.67 சதவீதமாக உள்ளது. சேவைகள் ஏற்றுமதியை பொறுத்தவரை, 3.54 சதவீதமாக உள்ளது.இந்நிலையில், இந்திய தொழிலக கூட்டமைப்பான, சி.ஐ.ஐ., நாட்டின் ஏற்றுமதிக்கான மறு பரிசீலனை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது குறித்து, சி.ஐ.ஐ., டைரக்டர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி கூறியதாவது:கொரோனா பரவல், உலக வர்த்தகத்தில் கடுமை யான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, இது அரசும் தொழில் துறையும் இணைந்து, உள்நாட்டுஉற்பத்தியை வலுப்படுத்த மிகவும் ஏற்ற சமயமாகும்.பல நாடுகள் தங்கள் வர்த்தக உத்திகளை மாற்றியமைப்பதையும், அவற்றின் இறக்குமதியை பன்முகப்படுத்துவதையும் கவனித்து வருகிறோம்.


இந்நிலையில், விலை குறைந்த, தரமான பொருட்கள் கிடைக்கும் மாற்று இடமாக இந்தியா உருவாக வேண்டும். ஏற்றுமதியை அதிகரிக்க முயற்சிகள் தேவைப்படும், 10 பகுதிகளை அறிக்கையில் தெரிவித்திருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.எளிதாக தொழில் செய்வது எனும் திட்டத்தை சீரமைத்து, போட்டித் தன்மையை மேம்படுத்தும் முயற்சிகளை தலைமை செயலர் மட்டத்திலான கண்காணிப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் சி.ஐ.ஐ., ஆலோசனை தெரிவித்துள்ளது.


போட்டித் தன்மையை வலுப்படுத்தவும், தரச் சான்றிதழ்கள் வழங்கும் வசதிகளை ஏற்படுத்தவும் போதுமான நிதி அவசியம் என்றும் சி.ஐ.ஐ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)