பதிவு செய்த நாள்
12 ஆக2020
22:50
புதுடில்லி:கடந்த ஜூலை மாதத்தில், நாட்டின் எரிபொருள் தேவை, 11.7 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. இருப்பினும், ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு, இயல்பு நிலை திரும்புவதால், எரிபொருள் தேவையும் அதிகரித்து வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தில், ஊரடங்கால் எரிபொருள் தேவை, 45 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்துவிட்டது. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், மே, ஜூன் மாதங்களில் தேவை அதிகரித்தது.இருப்பினும், மாநிலங்களால் சிறு அளவிலான ஊரடங்குகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலையில் தேவை குறைந்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், 3.5 சதவீதம் குறைந்துள்ளது.ஜூலை மாதத்தில் எரிபொருள் தேவை, 1.57 கோடி டன் ஆக குறைந்துவிட்டது. இதுவே, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், 1.78 கோடி டன் ஆக இருந்தது. மேலும், கடந்த ஜூனில், 1.62 கோடி டன் ஆக அதிகரித்திருந்தது.
நாட்டின் எரிபொருள் தேவையில், ஐந்தில் இரண்டு பங்கை பிடித்திருக்கும் டீசல் தேவை, ஜூலையில், 19.25 சதவீதம் சரிவைக் கண்டு, 55.2 லட்சம் டன் ஆக உள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இது, 63 லட்சம் டன் ஆக இருந்தது.பெட்ரோல் தேவை, கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடும்போது, 10.3 சதவீதம் குறைந்து, 22.6 லட்சம் டன் ஆக உள்ளது. கடந்த ஜூனில் இது, 22.8 லட்சம் டன் ஆக இருந்தது.சமையல் எரிவாயு தேவை, ஜூலையில், 2.3 சதவீதம் அதிகரித்து, 22.7 லட்சம் டன் ஆக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|