பதிவு செய்த நாள்
14 ஆக2020
12:38
புதுடில்லி :கடந்த ஜூலை மாதத்தில், நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 38.10 சதவீதம் சரிவை கண்டு உள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக, உலகளவில் தேவை குறைந்ததால், ஜூலையில், கிட்டத்தட்ட 10 ஆயிரத்து, 185 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதியே நடைபெற்றுள்ளது.
பங்களிப்புஇதுவே, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், 15 ஆயிரத்து, 112 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.அதிக உழைப்பை கோரும் இத்துறையானது, நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில், 15 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.கொரோனா பாதிப்பால், இத்துறை ஏற்றுமதியானது சமீப மாதங்களாக தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது.கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில், ஏற்றுமதி, 50.36 சதவீதம் சரிவை கண்டுள்ளது. இக்காலகட்டத்தில், நாட்டின் ஏற்றுமதி, 30 ஆயிரத்து, 825 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்றுள்ளது.
இதுவே, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 62 ஆயிரத்து, 25 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது.நவரத்தினம் இதில் தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி, 73.62 சதவீதம் சரிவை கண்டுள்ளது. இருப்பினும், வெள்ளி ஆபரண ஏற்றுமதி அதிகரித்துள்ளது.இந்தியாவிலிருந்து அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி ஆகிறது. இதில், நாட்டின் மொத்த, நவரத்தினம் மற்றும் தங்க ஆபரணங்கள் ஏற்றுமதியில், நான்கில் ஒரு பங்கு, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|