பதிவு செய்த நாள்
21 செப்2020
22:26
மும்பை:உலகளவிலான பங்குச் சந்தைகளில், பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப் பட்டதை அடுத்து, நேற்று, இந்திய பங்குச் சந்தைகளும் சரிவைக் கண்டன.
மேலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனப் பங்குகள் விலை சரிந்ததும் ஒரு காரணமாக அமைந்தது. நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், மும்பை பங்குச் சந்தையின், சென்செக்ஸ், 811.68 புள்ளிகள் சரிந்து, 38,034.14 புள்ளிகளாக நிலைபெற்றது.
இதேபோல், தேசிய பங்குச் சந்தையின், நிப்டியும், 254.40 புள்ளிகள் சரிந்து, 11,250.55 புள்ளிகளாக குறைந்தது.நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் பிரிவில், இண்டஸ் இண்ட் பேங்க் பங்குகள் விலை, 8 சதவீதம் அளவுக்கு சரிந்தது. இதையடுத்து, பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஆகிய நிறுவனப் பங்குகளும் விலை சரிந்தன.மாறாக கோட்டக் வங்கி, இன்போசிஸ், டி.சி.எஸ்., ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை சந்தித்தன. நேற்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள், 4.23 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|