பதிவு செய்த நாள்
21 செப்2020
22:34
புதுடில்லி:ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், அரசுக்கு சில ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கலாம் என்றும்; வாராக்கடனை சமாளிக்க, வாராக்கடன் வங்கியை ஏற்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.‘இந்திய வங்கிகள்: சீர்த்திருத்தங்களுக்கான நேரம்’ என்ற அறிக்கையில், ரகுராம் ராஜன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நிதியமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும், நிதிச் சேவைகள் துறையின் முக்கியத்துவத்தை குறைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.வங்கித் துறையில், அவ்வப்போது நிகழும் சரிவுகள் நிகழாமல், வங்கிகளின் வளர்ச்சியை உறுதிப்படுத்த அரசாங்கம் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அதிக செயல்திறன் மிக்க நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் சிறு நிதி வங்கிகளாகவும், சிறந்த சிறு நிதி வங்கிகள் பெரிய வங்கிகளாகவும் மாற்ற முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|