பதிவு செய்த நாள்
23 செப்2020
22:10
புதுடில்லி ;மின் வாகனங்களைப் பொறுத்தவரை, இத்தகைய வாகனங்களுக்கான மறு விற்பனை மதிப்பு ஒன்றுமே இல்லை. இதன் காரணமாக, இந்தியாவில் கூடுதல் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மக்களுக்கும் இது தெரியும். எனவே, கவனமாக அணுக வேண்டியுள்ளது என, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மசகாசு யோஷிமுரா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:‘வரி விதிப்பு, ஒழுங்குமுறை இவை இரண்டும் இணையாக இயங்க வேண்டும். அவை எதிர்திசைகளில் சென்றால், தேவையை உருவாக்குவது
கடினம். ’மேலும், முதலீட்டு கொள்கையில் அடிக்கடி மாற்றம் செய்தால், புதிய
முதலீடுகளுக்கான வாய்ப்புகள் ஒருபோதும் சாத்தியமில்லாமல் போகும்’தேவையை எப்படி உருவாக்க முடியும்? முதலில் நாங்கள் செலவை குறைக்க வேண்டும். புதிய தொழில்
நுட்பத்தை கொண்டு வர வேண்டும். அடுத்து, வரி விதிப்பு மற்றும் ஒழுங்குமுறைகள் நீண்ட காலத்துக்கானதாக இருக்க வேண்டும்.
அது குறுகிய காலத்துக்கானதாக இருந்தால், அடிக்கடி மாற்றம் காணக்கூடியதாக இருந்தால், எந்த புதிய முதலீட்டையும் கொண்டு வர முடியாது.தேவைகளை அதிகரிக்க ஒருங்கிணைந்த, ஒத்திசைவான கூட்டு முயற்சி தேவை.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|