பதிவு செய்த நாள்
25 செப்2020
22:00
சென்னை:ஊரடங்கில், 25 சதவீதமாக இருந்த, ‘ஆன்லைன்’ இறைச்சி விற்பனை, தற்போது, 35 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கொரோனா தடுப்பு ஊரடங்கில், கோழி இறைச்சி விற்பனை, 70 சதவீதம் வரை சரிந்தது. இதன் விலை கிலோவிற்கு, 40 ரூபாயாக குறைந்தது. இதற்கு, கோழி இறைச்சி மற்றும் முட்டை சாப்பிட்டால், கொரோனா பரவும் என்ற வதந்தி காரணமாக இருந்தது.அரசு மற்றும் உணவு பாதுகாப்புத் துறையினர், கோழி இறைச்சி சாப்பிட்டால், கொரோனா பரவாது என, பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். இதன் காரணமாக, கோழி இறைச்சியின் விற்பனை மீண்டும் அதிகரித்தது.
இந்த கால கட்டத்தில், ஆன்லைன் வாயிலாக நடைபெறும் இறைச்சி விற்பனை கணிசமாக உயர்ந்தது. இது குறித்து, ’டெண்டர்கட்ஸ்’ ஆன்லைன் இறைச்சி நிறுவன நிறுவனர் நிஷாந்த் சந்திரன் கூறியதாவது:கொரோனா காலத்தில் சரிந்திருந்த இறைச்சி விற்பனை, தற்போது அதிகரித்து வருகிறது. இதேபோல ஆன்லைன் இறைச்சி விற்பனையும், முன்பைவிட அதிகரித்துள்ளது. இதற்கு, சுகாதாரமான இறைச்சியை உட்கொள்ள வேண்டும் என, மக்கள் விரும்பியதே காரணம். இதனால், 20 சதவீதமாக இருந்த ஆன்லைன் இறைச்சி விற்பனை, தற்போது, 35 சதவீதமாக அதிகரித்துள்ளது; வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|