பதிவு செய்த நாள்
25 செப்2020
22:21
புதுடில்லி:அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பைக் தயாரிப்பாளரான, ‘ஹார்லி டேவிட்சன்’ இந்திய வணிகத்திலிருந்து வெளியேறுவதால், 2,000 பேர் வரை வேலை இழப்புக்கு ஆளாவர் என, வாகன முகர்வோர் சங்கமான, ‘எப்.ஏ.டி.ஏ.,’ தெரிவித்துள்ளது.
வேலை இழப்பு
இந்தியாவில் தயாரிப்பு மற்றும் விற்பனையிலிருந்து வெளியேறுவதாக, ஹார்லி டேவிட்சன் கடந்த வியாழக்கிழமைஅன்று அறிவித்தது. கொரோனா தாக்கத்தை அடுத்து, விற்பனை குறைவான நாடுகளிலிருந்து வெளியேறும் முடிவை இந்நிறுவனம் எடுத்ததை அடுத்து, இந்தியாவிலிருந்தும் வெளியேறுவதாக அறிவித்தது.மேலும், இதன் காரணமாக, 70 ஊழியர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வாகன முகவர் சங்கம், ஹார்லி டேவிட்சன் வெளியேற்றத்தால், 2,000 பேர் வரை வேலை இழப்புக்கு ஆளாவர் என்றும், வாகன முகர்வர்கள், 130 கோடி ரூபாய் வரை இழப்புக்கு உள்ளாவர் என்றும் தெரிவித்துள்ளது.இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:ஹார்லி டேவிட்சன் இந்தியாவிலிருந்து வெளியேறுவது குறித்து முகவர்களுக்கு முன்கூட்டி எதுவும் தெரிவிக்கவில்லை. இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் முகவர்களுக்கு வரவில்லை.இந்நிறுவனத்தின் டீலர்ஷிப்புக்காக, 3 – 4 கோடி ரூபாய் வரை முகவர்கள் செலவழித்துள்ளனர். 35 முகவர்களுக்கு 110 – 130 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கு எந்த இழப்பீடும் தரப்படவில்லை.
இறக்குமதி
இந்த, 35 முகவர்களிடம் பணியாற்றும், 1800 – 2000 ஊழியர்கள் வேலை இழப்புக்கு ஆளாவர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஹார்லி டேவிட்சன் பைக்கு களை இறக்குமதி செய்து, இந்தியாவில் விற்கும் வினியோக உரிமையை, ‘ஹீரோ மோட்டோகார்ப்’ நிறுவனம் பெற இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|