ரூ.1.77 லட்சம் கோடி கடனுக்கான அனுமதி ரூ.1.77 லட்சம் கோடி கடனுக்கான அனுமதி ...  ஆன்லைன் மளிகை விற்பனை 2.6 மடங்கு அதிகரிக்கும் ஆன்லைன் மளிகை விற்பனை 2.6 மடங்கு அதிகரிக்கும் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வெளியேறும் ஹார்லி டேவிட்சன் முகர்வோர் சங்கம் குற்றச்சாட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2020
22:21

புதுடில்லி:அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பைக் தயாரிப்பாளரான, ‘ஹார்லி டேவிட்சன்’ இந்திய வணிகத்திலிருந்து வெளியேறுவதால், 2,000 பேர் வரை வேலை இழப்புக்கு ஆளாவர் என, வாகன முகர்வோர் சங்கமான, ‘எப்.ஏ.டி.ஏ.,’ தெரிவித்துள்ளது.

வேலை இழப்பு

இந்தியாவில் தயாரிப்பு மற்றும் விற்பனையிலிருந்து வெளியேறுவதாக, ஹார்லி டேவிட்சன் கடந்த வியாழக்கிழமைஅன்று அறிவித்தது. கொரோனா தாக்கத்தை அடுத்து, விற்பனை குறைவான நாடுகளிலிருந்து வெளியேறும் முடிவை இந்நிறுவனம் எடுத்ததை அடுத்து, இந்தியாவிலிருந்தும் வெளியேறுவதாக அறிவித்தது.மேலும், இதன் காரணமாக, 70 ஊழியர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வாகன முகவர் சங்கம், ஹார்லி டேவிட்சன் வெளியேற்றத்தால், 2,000 பேர் வரை வேலை இழப்புக்கு ஆளாவர் என்றும், வாகன முகர்வர்கள், 130 கோடி ரூபாய் வரை இழப்புக்கு உள்ளாவர் என்றும் தெரிவித்துள்ளது.இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:ஹார்லி டேவிட்சன் இந்தியாவிலிருந்து வெளியேறுவது குறித்து முகவர்களுக்கு முன்கூட்டி எதுவும் தெரிவிக்கவில்லை. இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் முகவர்களுக்கு வரவில்லை.இந்நிறுவனத்தின் டீலர்ஷிப்புக்காக, 3 – 4 கோடி ரூபாய் வரை முகவர்கள் செலவழித்துள்ளனர். 35 முகவர்களுக்கு 110 – 130 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கு எந்த இழப்பீடும் தரப்படவில்லை.

இறக்குமதி

இந்த, 35 முகவர்களிடம் பணியாற்றும், 1800 – 2000 ஊழியர்கள் வேலை இழப்புக்கு ஆளாவர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஹார்லி டேவிட்சன் பைக்கு களை இறக்குமதி செய்து, இந்தியாவில் விற்கும் வினியோக உரிமையை, ‘ஹீரோ மோட்டோகார்ப்’ நிறுவனம் பெற இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)