பதிவு செய்த நாள்
29 செப்2020
21:47
புதுடில்லி:எல்.ஐ.சி., நிறுவனத்தின், 25 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இந்த விற்பனை பல கட்டங்களாக நடைபெறும் எனவும், இதற்காக அமைச்சரவையின் அனுமதியை பெற திட்டமிட்டுள்ளதாகவும் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:மத்திய அரசு, எல்.ஐ.சி., நிறுவனத்தின், 25 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துஉள்ளது. இந்த பங்கு விலக்கல் பல கட்டங்களாக மேற்கொள்ளப்படும்.பங்கு விலக்கலுக்காக, விரைவில் மத்திய அமைச்சரவையின் அனுமதி பெறும் முயற்சி மேற்கொள்ளப்படும். மேலும் பங்கு விலக்கல் எப்போது என்பது சந்தையின் நிலவரத்தை பொறுத்து முடிவு செய்யப் படும்.
கொரோனா தாக்கத்தால் பெரும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டிருக்கும் நிலையில், நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிதியாண்டில், பங்கு விலக்கல் உள்ளிட்டவற்றின் மூலம், 21 லட்சம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், ஏப்ரல் மாதம் முதல் இதுவரை, 5,700 கோடி ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|