பதிவு செய்த நாள்
30 செப்2020
11:47
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் மூன்றாம் நாளில் ஏற்ற – இறக்கமாக வர்த்தகமாகின.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 49 புள்ளிகள் சரிந்து 37,924.21ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 1.45 புள்ளிகள் சரிந்து 11,220.95ஆகவும் வர்த்தகமான நிலையில் சற்றுநேரத்தில் ஏற்றம் கண்டு, சென்செக்ஸ் 100 புள்ளிகள் வரை உயர்ந்தது. ஆனால் மீண்டும் பங்குச்சந்தைகள் சரிந்தன. காலை 11.20 மணியளவில் சென்செக்ஸ், நிப்டி தலா 3 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகின.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்ற, இறக்கமான சூழல், கடந்தகால வர்த்தகத்தில் ஏற்பட்ட ஏற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் ஏற்ற, இறக்கமான சூழலில் வர்த்தகமாவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு உயர்வு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மாற்றமின்றி துவங்கிய நிலையில் காலை 11.20 மணியளவில் 7 காசுகள் உயர்ந்து ரூ.73.77ஆக வர்த்தகமானது.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை இன்று 1.06 சதவீதம் சரிந்து 41.13 அமெரிக்க டாலராக விற்பனையானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|