பதிவு செய்த நாள்
07 அக்2020
22:00
புதுடில்லி:நாட்டின் பொருளாதாரம், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேவையை அதிகரிக்க, சரியான சமயத்தில் நிதி ஊக்கச் சலுகைகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை அரசு அறிந்துள்ளது. இன்னொரு நிதி ஊக்கச் சலுகையை வழங்க தயாராக இருக்கிறோம் என, முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் தெரிவித்துள்ளார்.
விரையம்
இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:பொருளாதார வளர்ச்சியை மேலும் துாண்டுவதற்காக, ஊக்கச் சலுகைகளை வழங்க வேண்டிய அவசியம் இருப்பதை நாங்கள் உணர்கிறோம். இதை நான் புதிதாக சொல்லவில்லை. ஏற்கனவே நிதியமைச்சரும் இதை கூறியிருக்கிறார்.
ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில், நுகர்வு தேவையை மீண்டும் உயர்த்த முயற்சித்து இருந்தால், அது வீணாகி இருக்கும். செலவழிப்பதற்கான அனைத்து வழிகளையும் அடைத்து இருந்த நிலையில், அந்த முயற்சியை மேற்கொண்டிருந்தால், அது விரையத்தையே ஏற்படுத்தி இருக்கும்.தளர்வுகள்தற்போது தளர்வுகளை அறிவித்து வருவதால், உற்பத்தி துறை, கொரோனாவுக்கு முந்தைய காலகட்ட நிலைக்கு திரும்பி வருகிறது.
மேலும், சேவை துறையும் விரைவில் மீட்சியை காணும்.எனவே, தளர்வுகள்மேலும் அதிகரிக்கும் போது, தேவைகள் அதிகரிக்கும்.இத்தகைய சூழலில், மேலும் ஒரு நிதி ஊக்கச் சலுகையை அறிவிக்க தயாராக இருக்கிறோம். அது ரிசர்வ் வங்கி தரப்பிலும், அரசின் தரப்பிலும் இருக்க வாய்ப்பிருக்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ஏற்கனவே, புதிய மேம்பாட்டு வங்கியின் தலைவர் கே.வி.காமத், ரிசர்வ் வங்கி மற்றும் அரசு தரப்பில் இன்னொரு நிதி ஊக்கச் சலுகையை அறிவிப்பதற்கான அவசியம் இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|