பதிவு செய்த நாள்
16 அக்2020
11:39
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடுமையாக சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த நிலையில் இன்று(அக்., 16) வர்த்தகவாரத்தின் கடைசி நாளில் உயர்வுடன் வர்த்தகத்தை துவங்கி உள்ளன.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 320.33 புள்ளிகள் உயர்ந்து 40,048.74 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 86.74 புள்ளிகள் உயர்ந்து 11,767.10ஆகவும் வர்த்தகமாகின. தொடர்ந்து உயர்வுடன் உள்ள பங்குச்சந்தைகள் காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 280, நிப்டி 75 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை தொடர்ந்தன.
ஆசிய பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கமாக இருந்த போதிலும் தொடர்ந்து ஐடி., நிறுவன பங்குகள் உயர்வுடன் இருப்பதாலும், ஹெச்சிஎல்., நிறுவனத்தின் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் அந்நிறுவனத்தின் லாபம் 7 சதவீதம் உயர்ந்து இருப்பதுடன், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கி இருப்பது உள்ளிட்ட காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சென்செக்ஸ் அளவிட உதவும் 30 முக்கிய நிறுவன பங்குகளில் 27 நிறுவன பங்குகள் ஏற்ற பாதையில் இருந்தன.
ரூபாயின் மதிப்பு உயர்வு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.73.33ஆக வர்த்தகமானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|