பதிவு செய்த நாள்
16 அக்2020
22:04
புதுடில்லி:நாட்டின் பெட்ரோல் தேவை, கொரோனா காலத்துக்கு முன்பிருந்த நிலைக்கு திரும்பிய சூழலில், தற்போது டீசலுக்கான தேவையும், பழைய நிலைக்குத் திரும்பி இருக்கிறது.
தேவை அதிகரித்ததை அடுத்து, நடப்பு மாதத்தின் முதல் பாதியில், டீசல் விற்பனை, கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது, 8.8 சதவீதம் உயர்வைக் கண்டுஉள்ளது. இத்துறையின் முதற்கட்ட தரவுகள் இதை தெரிவிக்கும் விதத்தில் உள்ளன.கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில், மத்திய அரசு, கடந்த மார்ச் இறுதியில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இதன் காரணமாக, டீசலுக்கான தேவை சரிந்தது. அதன் பின் இப்போதுதான் முதன் முறையாக தேவை அதிகரித்துஇருக்கிறது.
கொரோனாவை முன்னிட்டு, மக்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்துவது அதிகரித்த காரணத்தால், பெட்ரோல் விற்பனை டீசலை விட விரைவாக, கடந்த மாதமே மீட்சியைக் கண்டது.தேவை அதிகரிப்பு மற்றும் பண்டிகை காலம் ஆகியவை காரணமாக, டீசல் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு மாதத்தின் முதல் பாதியில், பெட்ரோல் விற்பனை, 9.82 லட்சம் டன் ஆகவும்; டீசல் விற்பனை, 26.50 லட்சம் டன் ஆகவும் அதிகரித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|