அமெரிக்க அரசு கருவூலங்களில்  இந்திய முதலீடு அதிகரிப்புஅமெரிக்க அரசு கருவூலங்களில் இந்திய முதலீடு அதிகரிப்பு ...  ‘திருமண செலவு குறைவதால் பதிலுக்கு தங்கமாக வாங்குகின்றனர்’ ‘திருமண செலவு குறைவதால் பதிலுக்கு தங்கமாக வாங்குகின்றனர்’ ...
உலக சராசரிக்கும் அதிகமாக இந்தியா தானியங்கி மயமாகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2020
22:19

புதுடில்லி:நிறுவனங்கள், டிஜிட்டல் மற்றும் தானியங்கி மயமாவதில், உலக சராசரிக்கும் அதிகமாக, இந்தியா முன்னேறி இருப்பதாக, உலக பொருளாதார மன்றம் அண்மையில் தெரிவித்துள்ளது.

நிறுவனங்கள் டிஜிட்டல் மற்றும் தானியங்கி மயமாவது, கொரோனா தாக்கத்தால் உலகளவில் எதிர்பார்ப்புக்கும் மேலாக வேகமெடுத்துள்ளது. இந்நிலையில், இந்திய நிறுவனங்கள், உலக சராசரிக்கும் மேலாக, முன்னேறி இருக்கின்றன.எதிர்காலத்தில், உலகளவில், 26 நாடுகளில், 15 துறைகளில், நிறுவனங்கள் தானியங்கி மயமாவதை அடுத்து, 8.5 கோடி பேருக்கு வேலையிழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்நிலையும் கொரோனாவால் விரைவுபடுத்தப்பட்டிருப்பதாக, ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதே சமயம், இந்த தொழில்நுட்ப மாற்றங்களால், 8.7 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய வேலை வாய்ப்புகள், பெரும்பாலும், செயற்கை நுண்ணறிவு, கருத்துருவாக்கம் ஆகிய துறைகளில் ஏற்படும் என்றும் கருதப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தவரை, இந்த தொழில்நுட்ப மாற்றங்கள், உலக சராசரியை விட அதிகமாக இருக்கிறது.உலகளவில், 50 சதவீத நிறுவனங்கள், பணிகளை தானியங்கி மயமாக்குவதை துரிதப்படுத்தும் நிலையில், இந்தியாவில் இது, 58 சதவீதமாக இருக்கிறது.


இதேபோல், உலகளவில், 80 சதவீத நிறுவனங்கள் பணிகளில் டிஜிட்டல்மயமாக்குவதை துரிதப்படுத்தும் நிலையில், இந்தியாவில் இது, 87 சதவீதமாக உள்ளது. இது, உலகளாவிய சராசரியான, 84 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறது.இவ்வாறு, உலக பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)