பதிவு செய்த நாள்
30 அக்2020
21:49
மும்பை:டாடா குழுமத்துடன் உள்ள, எழுபது ஆண்டுகால தொடர்பை முற்றிலுமாக துண்டித்துக்கொள்ளும் முயற்சியில், அதற்கான திட்டத்தை, உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது, ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம்.
மிஸ்திரி குடும்பத்தினர், டாடா நிறுவனத்தில் தங்களுக்கு, 1.75 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பங்கிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.டாடா குழுமத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரி, கடந்த, 2016ம் ஆண்டு பதவியிலிருந்து தடாலடியாக நீக்கப்பட்டதை அடுத்து, டாடா – மிஸ்திரி இருதரப்புக்கும் இடையே மோதல் துவங்கியது. அது, இப்போது உச்ச நீதிமன்றம் வரை வந்துள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனம், இரண்டு குழுக்களை கொண்ட நிறுவனமாகும். டாடா குழுமம், டாடா டிரஸ்டுகள், டாடா குடும்ப உறுப்பினர்கள் மற்றும் டாடா நிறுவனங்கள் ஆகியவை கொண்ட ஒரு குழுவிடம் 81.6 சதவீத பங்குகள் உள்ளன. அடுத்து மிஸ்திரி குடும்பத்தினர் வசம், 18.37 சதவீத பங்குகள் உள்ளது.
இந்நிலையில், டாடா சன்ஸ் நிறுவனத்திலிருந்து வெளியேற முடிவு செய்து, மிஸ்திரி குடும்பத்தினர் ஒரு திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றனர். இந்த திட்டம் எதிர்தரப்பினரால் ஏற்றுக்கொள்ளப்படுமா, மறுமதிப்பீடுகள் நடக்குமா என்பதெல்லாம் இனிமேல் தான் தெரியவரும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|