பதிவு செய்த நாள்
31 அக்2020
22:08
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், இதுவரை, 1.27 லட்சம் கோடி ரூபாயை, வருமான வரி ரீபண்டு தொகையாக, தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக, நிதி துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே கூறியுள்ளார்.
மேலும், துரிதமாக ரீபண்டை வழங்குவதற்கு, அனைத்தும் தானியியங்கி முறைக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும், அனைத்தும் மிகவும் வெளிப்படையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், ரீபண்டு தொகை வழங்குவதை ஒவ்வொரு வாரமும் வருவாய் துறை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:கொரோனா பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டிருக்கும் நிலையில், நிறுவனங்களுக்கும், தனிநபர்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில், நடப்பு நிதியாண்டில், இதுவரை, 1.27 லட்சம் கோடி ரூபாய் ரீபண்டாக வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல், 1ம் தேதி முதல், அக்டோபர், 27ம் தேதி வரையிலான காலத்தில், இந்த தொகை, மொத்தம், 39.14 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில், 37.22 லட்சம் தனிநபர்களுக்கு, 34 ஆயிரத்து, 532 கோடி ரூபாய் ரீபண்டாக வழங்கப்பட்டு உள்ளது. மேலும், 92 ஆயிரத்து, 376 கோடி ரூபாய், 1.92 லட்சம் நிறுவன கணக்குகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|