பதிவு செய்த நாள்
19 நவ2020
21:45
புதுடில்லி:எல் அண்டு டி., நிறுவனம், புல்லட் ரயில் திட்டத்தின் ஒரு பகுதியை நிறுவுவதற்கான, 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை பெற்றுள்ளது.
உள்கட்டுமான துறையில் முன்னணி நிறுவனமான எல் அண்டு டி., மும்பையிலிருந்து,
அகமதாபாத் வரையிலான புல்லட் ரயில் திட்டத்தின் ஒரு பகுதியை நிறைவேற்ற, ஆர்டரை பெற்றுள்ளது.ஒப்பந்த தொகை எவ்வளவு என்பதை துல்லியமாக தெரிவிக்காவிட்டாலும்,
7 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என, எல் அண்டு டி., தெரிவித்துள்ளது.
ஒப்பந்தப்படி, புல்லட் ரயில் திட்டத்தில், 87.57 கிலோ மீட்டர் துாரத்துக்கான பணிகளை, எல் அண்டு டி., நிறைவேற்றி தரவேண்டும்.மேலும், இந்த ஒப்பந்தத்தில், ஒரு ரயில் நிலையம், பெரிய அளவிலான ஆற்று பாலங்கள், பராமரிப்பு பணிமனைகள், மற்றும் சில துணை வேலைகளும் அடங்கும்.இந்த புல்லட் ரயில் திட்டம், கிட்டத்தட்ட, 508 கிலோ மீட்டர் துாரம் கொண்டதாகும். வழித்தடத்தில் மொத்தம், 12 ரயில் நிலையங்கள் உள்ளன.
ஒரு மணி நேரத்துக்கு, 320 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த புல்லட் ரயில், குறிப்பிட்ட சில இடங்களில் நிற்கும்பட்சத்தில், இரண்டு மணி நேரத்திலும்; அனைத்து நிலையங்களிலும் நிற்கும்பட்சத்தில், 3 மணி நேரத்திலும் இலக்கை அடையும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|