அன்னியச் செலாவணி இருப்பு அதிகரிப்பு அன்னியச் செலாவணி இருப்பு அதிகரிப்பு ... ரூ.1 லட்சம் கோடியை தாண்டிய ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டிய ஜி.எஸ்.டி., வசூல் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சேமிப்பு பணத்தை முதலீடு செய்வது எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2020
22:21

குறைந்த வட்டி விகித சூழலில், கைவசம் உள்ள சேமிப்பு பணத்தில், அதிக பலன் தரக்கூடிய முதலீட்டு வாய்ப்புகளை பரிசீலிப்பது அவசியம்.


கடனுக்கான வட்டி விகிதம், இது வரை இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது. அதே நேரத்தில், வைப்பு நிதி மற்றும் சேமிப்பு கணக்கு அளிக்கும் வட்டி விகித பலனும் குறைந்திருக்கிறது. சேமிப்பு கணக்கிற்கு கடந்த ஆண்டு, 4 சதவீதம் வரை வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பொது துறை வங்கிகள், 3 சதவீதத்திற்கு குறைவான வட்டி வழங்குகின்றன.


வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதமும் குறைந்திருக்கிறது. இதன் காரணமாக, வைப்பு நிதி முதலீட்டை நாடுபவர்கள் மத்தியில், இதன் பலன் போதுமானதா எனும் கேள்வி எழுந்திருக்கிறது. இந்த பின்னணியில், அதிக பலன் அளிக்கும் முதலீடு வாய்ப்புகளை பரிசீலிக்கும் தேவை ஏற்பட்டிருக்கிறது.


சேமிப்பு கணக்கு



பொதுவாக, பணத்தை அப்படியே வைத்திருப்பதற்கு பதில், அதன் மூலம் வருமானம் கிடைக்கும் வகையில் முதலீடு செய்வதே சரியானது என கருதப்படுகிறது. கைவசம் உள்ள பணத்தை சேமிப்பு கணக்கில் போட்டு வைப்பது நல்லது என்றாலும், இதற்கான வட்டி விகிதம் குறைவு எனும் போது, பலனும் குறைவாகவே இருக்கும். அதிலும், பணவீக்கத்தின் தாக்கத்தை கருத்தில் கொள்ளும் போது, நிதி இலக்குகளை அடைவதிலும் சிக்கல் ஏற்படலாம்.


எனவே, சேமிப்பு கணக்கில் தேவைக்கு அதிகமான பணத்தை வைத்திருப்பதை விட, முதலீடு செய்வது ஏற்றதாக இருக்கும். நடுத்தர வர்க்கத்தினர், அவசர தேவைக்கான தொகையை உடனடியாக எடுக்கக்கூடிய வகையில் சேமிப்பு கணக்கில் போட்டு வைக்கின்றனர். இது பாதுகாப்பு உணர்வை அளித்தாலும், கையில் பணம் இருக்கும் உணர்வே, எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டும் எனும் உணர்வை குறைத்துவிடும் என்றும் கருதப்படுகிறது.


எனவே, அவசர தேவைக்கான தொகையை, ‘லிக்விட் பண்ட் ரக மியூச்சுவல் பண்ட்’களில் முதலீடு செய்யலாம். இவை, சேமிப்பு கணக்கை விட அதிக பலன் அளிப்பதோடு, தேவைப்படும் நேரத்தில் பணத்தை விலக்கிக் கொள்ளும் வாய்ப்பையும் அளிக்கின்றன.சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தில், எந்த அளவுக்கான தொகை உடனடியாக தேவைப்படலாம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.


வைப்பு நிதி


எஞ்சியுள்ள தொகையை அப்படியே வைத்திருக்காமல், நிதி இலக்குகளை நிறைவேற்றும் வகையில் முதலீடு செய்யலாம். அடுத்த ஒன்று முதல் மூன்றாண்டுகளில் தேவைப்படும் தொகையை, குறுகிய கால முதலீடுகளில் போட்டு வைக்கலாம். எஞ்சிய தொகையை நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யலாம். குறுகிய கால முதலீட்டிற்கும், கடன்சார் மியூச்சுவல் பண்ட்களை பரிசீலிக்கலாம். எனினும், இவற்றின் இடர் அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


பாதுகாப்பானது எனும் காரணத்திற்காக வைப்பு நிதி அதிகம் நாடப்படுகிறது. குறிப்பாக, நிரந்தர வருமான பலன் விரும்பும் ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோர் மத்தியில், வைப்பு நிதி பிரபலமாக உள்ளது. எனினும், தற்போது வழங்கப்படும் குறைந்த வட்டி விகிதத்தால், இவற்றின் பலன் குறைவாகவே இருக்கும். இந்நிலையில், மாற்று வாய்ப்புகளை பரிசீலிக்கலாம். வைப்பு நிதிகளுக்கு ஒரு சில வங்கிகள் அதிக வட்டி விகிதம் அளிக்கின்றன என்றாலும், அவற்றின் இடர் அம்சத்தையும் பரிசீலிக்க வேண்டும். சேமித்து வைக்கும் பணம், உரிய பலன் அளிக்கும் வகையில் முதலீட்டு வழிகளை நாட வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)