பதிவு செய்த நாள்
02 டிச2020
22:05
புதுடில்லி:தீபாவளிக்கு பின், அல்லது புத்தாண்டில் தொலைதொடர்பு நிறுவனங்கள், தொலைபேசி கட்டணங்களை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், முதலடியை எடுத்து வைத்திருக்கிறது, வோடபோன் ஐடியா.
இந்நிறுவனம், முதற்கட்டமாக, உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பிராந்தியத்தில், ‘போஸ்ட்பெய்டு’ திட்டங்களுக்கான கட்டணத்தில், 50 ரூபாய் அதிகரித்துள்ளது.
கட்டணத்தை யார் முதலில் அதிகரிப்பது என்பது, இதுவரை கேள்விக் குறியாகவே இருந்து வந்தது. ஏர்டெல் நிறுவனம், கட்டண உயர்வை முதலில் அறிவிக்கப்போவதில்லை என
தெரிவித்து விட்டது. ஜியோ இன்னும் வாய் திறக்கவில்லை.
இந்நிலையில், மிகுந்த நிதி நெருக்கடியில் இருக்கும், வோடபோன் ஐடியா நிறுவனம் தான், முதலில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே, முதலடியை அந்நிறுவனம் எடுத்து வைத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|