பதிவு செய்த நாள்
09 டிச2020
16:58
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றன. சென்செக்ஸ் முதன்முறையாக 46 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது.
கொரோனா பிரச்னையால் மந்தமாக இருந்த பொருளாதாரம் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து உச்சம் தொட்டு வந்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 300, தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 78 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கின. தொடர்ந்து ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள் இன்று புதிய உச்சத்தை தொட்டு வர்த்தகத்தை நிறைவு செய்தன. வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 495 புள்ளிகள் உயர்ந்து 46,103.50 எனும் புதிய உச்சத்தை தொட்டது. இதேப்போன்று நிப்டி 136.15 புள்ளிகள் உயர்ந்து 13,529.10 புள்ளிகளை தொட்டது.
கொரோனாவுக்கான தடுப்பு மருந்தில் உலகில் பல நாடுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக உலகளவில் பங்குச்சந்தைகள் முன்னேற்றம் கண்டன. இந்திய பங்குச்சந்தைகளும் உயர்ந்தன. மேலும் ரூபாயின் மதிப்பு உயர்வு, இன்போசிஸ், டிசிஎஸ்., உள்ளிட்ட ஐடி நிறுவன பங்குகள் அதிகம் ஏற்றம் கண்டது உள்ளிட்ட காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் முடிந்ததோடு, புதிய உச்சத்தையும் தொட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|