பதிவு செய்த நாள்
27 டிச2020
21:54
சொந்த வீடு வாங்கும் வாய்ப்பை, 82 சதவீதம் பேர் பரிசீலித்து வருவதாகவும், வீடு வாங்க இதை பொருத்தமான நேரமாக பலரும் கருதுவதும், ஆய்வில் தெரிய வந்துள்ளது.
‘ரியல் எஸ்டேட்’ இணையதளமான, ‘நோ புரோக்கர்’ சென்னை, டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் உள்ளவர்கள் மத்தியில் ஆய்வு செய்து, ‘இந்திய ரியல் எஸ்டேட் ரிப்போர்ட் – 2020’ எனும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில், 82 சதவீதம் பேர், 2021ம் ஆண்டில் சொந்த வீடு வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இதுவரை வாடகை வீட்டை தேர்வு செய்தவர்கள் மத்தியிலும் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக, வீட்டில் இருந்து பணியாற்றும் வாய்ப்பு, வட்டி விகித போக்கு, ரியல் எஸ்டேட் சலுகைகள் ஆகிய அம்சங்கள், சொந்த வீடு மீதான ஆர்வத்தை அதிகரித்துஉள்ளன.சொந்த வீடு ஆர்வம்அதிகரித்துள்ளதோடு, வீட்டிற்கான பட்ஜெட்டும் அதிகரித்து உள்ளது தெரிய வந்துள்ளது.பெரும்பாலானோர், 60லட்சம் ரூபாய் வரை மதிப்புஉள்ள வீட்டை வாங்க விருப்பம் கொண்டுள்ளனர்.மேலும், 1 கோடி ரூபாய் வரை மதிப்புள்ள வீட்டை வாங்க விரும்புகிறவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|