பதிவு செய்த நாள்
05 ஜன2021
12:47
மும்பை: வரலாற்றில் முதல் முறையாக, மும்பை பங்குச் சந்தையின், சென்செக்ஸ் குறியீட்டு எண், 48 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியுள்ளது.நேற்றைய தினம் பங்குச் சந்தைகள் தொடர்ந்து, ஒன்பதாவது, வர்த்தக நாளாக உயர்வைக் கண்டன.
மத்திய அரசு இரண்டு கொரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு அனுமதி வழங்கியதை முன்னிட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்தது. இதன் காரணமாக பங்குச் சந்தைகள் நேற்று உயர்வை சந்தித்தன.அத்துடன் ரூபாய் மதிப்பு அதிகரித்தது, உலக சந்தைகளில் சாதகமான நிலை மற்றும் நம்பிக்கை அளிக்கும் விதமான பொருளாதார தரவுகள் ஆகியவையும் இந்த உயர்வுக்கு உதவிகரமாக இருந்தன.நேற்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 48,176.80 புள்ளிகளையும்; தேசிய பங்குச் சந்தை, 14,147.95 புள்ளிகளையும் எட்டி சாதனை படைத்தன.தகவல் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் எரிவாயு, வாகனம், தொலைதொடர்பு ஆகிய துறைகளை சேர்ந்த பங்குகள் நேற்றைய தினம் விலை உயர்வு கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|