‘ரிசர்வ் வங்கி இனி வட்டியை குறைக்காது’ ‘ரிசர்வ் வங்கி இனி வட்டியை குறைக்காது’ ... கடன் வலையில் சிக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள் கடன் வலையில் சிக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் பாதிப்பை குறைக்க உதவின’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2021
21:19

சென்னை:கடந்த ஆண்டு, கொரோனா பாதிப்பினால் மிகவும் கடினமான காலகட்டமாக அமைந்தது என்றும், ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டிருக்கும் கொள்கைகள், பொருளாதார பாதிப்புகளை குறைப்பதற்கு உதவியது என்றும், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

பாதிப்புசென்னை நிகழ்ச்சி ஒன்றுக்காக, காணொலி மூலம் கலந்து கொண்டவர், இது குறித்து மேலும் கூறியுள்ளதாவது:இப்போது பின்னால் திரும்பி பார்த்தால், ரிசர்வ் வங்கியின் கொள்கைகள், பொருளாதார பாதிப்புகளை எளிதாக்க எவ்வளவு துாரம் உதவியாக இருந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது.

நிதி ஸ்திரத்தன்மை என்பது, பொதுவாக அனைவருக்கும் நன்மை பயக்கும் ஒன்றாகும். அதன் வலுவான தன்மை, அதனுடன் தொடர்புடைய அனைவராலும் பாதுகாக்கப்பட வேண்டும். பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வளர்ச்சியை நாம் ஆதரிக்க வேண்டும். நிதி ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்.

நிதி ஸ்திரத்தன்மையில் சமரசம் செய்யாமல், வளர்ச்சியை ஏற்படுத்த தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க, ரிசர்வ் வங்கி உறுதியுடன் உள்ளது.நாங்கள் அனைத்து வங்கிகளையும், வங்கி சாரா நிதி நிறுவனங்களையும், கொரோனா பாதிப்புகள் குறித்து மதிப்பீடு செய்யுமாறு அறிவுரை வழங்கினோம். குறிப்பாக, அவற்றின் பண இருப்பு நிலை, பணப்புழக்கம்.கொரோனாசொத்துக்களின் தரம், மூலதனம் போன்றவற்றில் கொரோனாவின் பாதிப்புகள் குறித்து மதிப்பீடு செய்யச் சொன்னோம்.புத்திசாலித்தனமாக ஒரு சில பெரிய பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் ஏற்கனவே தேவையான மூலதனத்தை திரட்டி உள்ளன. மேலும், தீங்கற்ற வழிகளில் மூலதனத்தை அதிகரித்துக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)