பதிவு செய்த நாள்
19 ஜன2021
22:26
புதுடில்லி:‘ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ்’ நிறுவனம், நாளை, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது.அடமான கடன்கள் வழங்கி வரும் நிறுவனமான,‘ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ்’, நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, நாளை துவங்கி, 25ம் தேதியுடன் முடிவடைகிறது.
ஒரு பங்கின் விலை, 517 – 518 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த பங்கு வெளியீட்டின் மூலம் இந்நிறுவனம், 1,154 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில், 265 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளும்; 889 கோடி ரூபாய்க்கு, நிறுவனர்களின் வசம் இருக்கும் பங்குகளும் விற்பனைக்கு விடப்பட உள்ளன.
இதன் மூலம் திரட்டப்படும் நிதியை, நிறுவனத்தின் மூலதன தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்தப்படும். இந்நிறுவனத்தின் பங்குகள், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட இருக்கின்றன.
இந்த ஆண்டின், மூன்றாவது பங்கு வெளியீடாகும் இது. ‘இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன்’, ‘இண்டிகோ பெயின்ட்ஸ்’ ஆகியவற்றை அடுத்து, ‘ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ்’ மூன்றாவதாக வருகிறது. இதில், ‘இண்டிகோ பெயின்ட்ஸ்’ பங்கு வெளியீடு, இன்று துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|