பதிவு செய்த நாள்
19 ஜன2021
22:32
புதுடில்லி:நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான,‘டாடா மோட்டார்ஸ்’, கடந்த ஆண்டில் மட்டும், 98 காப்புரிமைகளை பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த காப்புரிமைகள் பெரும்பாலும், ‘செஸ்’ எனப்படும், வாகனங்களின் பாதுகாப்பு, மின் மயமாக்கம் போன்றவற்றுடன் சம்பந்தமுடையவை. எலக்ட்ரானிக்ஸ், அதிர்வு போன்றவற்றுடன் சம்பந்தப்பட்ட காப்புரிமைகளும் அதிகம் பெறப்பட்டுள்ளன என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், தலைமை தொழில்நுட்ப அதிகாரி ராஜேந்திர பெட்கர் கூறியதாவது:டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை, புதுமைகளைத் தொடர்ந்து அறிமுகம் செய்துவரும் வரலாறு கொண்ட ஒரு நிறுவனமாகும்.
உலகளாவிய தர வடிவமைப்பு, பாதுகாப்பு, சிறந்த டிரைவிங் அனுபவம் ஆகியவற்றை வழங்கும் வகையில்,'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், மிகச் சிறப்பான தயாரிப்பை வழங்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டிருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|