நகை விற்பனை அதிகரிப்பு நகை விற்பனை அதிகரிப்பு ...  முதலீட்டு விதிகளில் மாற்றம்: அமேசானுக்கு நெருக்கடி முதலீட்டு விதிகளில் மாற்றம்: அமேசானுக்கு நெருக்கடி ...
போக்குவரத்து விதியை மீறினால் காப்பீட்டு பிரீமியம் அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2021
22:37

புதுடில்லி:இனி போக்குவரத்து விதிகளை மீறினால், வாகனத்துக்கான காப்பீட்டு பிரீமியத் தொகை அதிகரிக்கப்படும்.போக்குவரத்து விதிமுறை மீறல்களை குறைப்பதற்காக, வாகன காப்பீட்டு பிரீமியங்களில், புதிய பிரிவை அறிமுகப்படுத்த, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., நியமித்த குழு பரிந்துரைத்துள்ளது.

இதற்கான வரைவு அறிக்கையில், மூன்றாம் நபர் காப்பீடு, கூடுதல் மூன்றாம் நபர் காப்பீடு மற்றும் தனிநபர் விபத்து காப்பீடு சுய பாதிப்பு காப்பீடு ஆகிய நான்கு பிரிவுகளுடன், ‘போக்குவரத்து விதி மீறல்’ என்ற ஒன்றையும் இணைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

‘சிபில் ஸ்கோர்’

ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுவானது, தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:கடந்த இரண்டு ஆண்டுகளில் செய்யப்பட்ட போக்குவரத்து விதிமுறை மீறல்களை கணக்கில் கொண்டு, அதற்கேற்ப பிரீமியத் தொகையை வசூலிக்க வேண்டும்.


இதற்காக, ‘சிபில் ஸ்கோர்’ போல, போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான தரவுகள் ஒவ்வொரு வாகனத்துக்கும் சேகரிக்கப்பட்டு, அவை காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.அதன் அடிப்படையில், பிரீமிய கட்டணம் அதிகரிக்கும். புதிய வாகனங்களுக்கு இது பொருந்தாது எனினும், அடுத்த புதுப்பித்தலின் போது, கடந்த காலத்தில் செய்யப்பட்ட விதிமுறை மீறல் புள்ளிகள் அடிப்படையில், பிரீமியம் நிர்ணயிக்கப்படும்

.பரிந்துரை

இதன் மூலம் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் குறையும்.இவ்வாறு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.இதில், இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், நமது வாகனத்தை நாம் ஓட்டாமல், டிரைவரோ அல்லது தெரிந்தவர்களோ ஓட்டி, விதிமுறை மீறல்களுக்கு ஆளானாலும், வாகனத்தின் உரிமையாளர்களே அதிக பிரீமிய தொகை செலுத்த நேரிடும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)