பதிவு செய்த நாள்
19 ஜன2021
22:37
புதுடில்லி:இனி போக்குவரத்து விதிகளை மீறினால், வாகனத்துக்கான காப்பீட்டு பிரீமியத் தொகை அதிகரிக்கப்படும்.போக்குவரத்து விதிமுறை மீறல்களை குறைப்பதற்காக, வாகன காப்பீட்டு பிரீமியங்களில், புதிய பிரிவை அறிமுகப்படுத்த, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., நியமித்த குழு பரிந்துரைத்துள்ளது.
இதற்கான வரைவு அறிக்கையில், மூன்றாம் நபர் காப்பீடு, கூடுதல் மூன்றாம் நபர் காப்பீடு மற்றும் தனிநபர் விபத்து காப்பீடு சுய பாதிப்பு காப்பீடு ஆகிய நான்கு பிரிவுகளுடன், ‘போக்குவரத்து விதி மீறல்’ என்ற ஒன்றையும் இணைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
‘சிபில் ஸ்கோர்’
ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுவானது, தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:கடந்த இரண்டு ஆண்டுகளில் செய்யப்பட்ட போக்குவரத்து விதிமுறை மீறல்களை கணக்கில் கொண்டு, அதற்கேற்ப பிரீமியத் தொகையை வசூலிக்க வேண்டும்.
இதற்காக, ‘சிபில் ஸ்கோர்’ போல, போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான தரவுகள் ஒவ்வொரு வாகனத்துக்கும் சேகரிக்கப்பட்டு, அவை காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.அதன் அடிப்படையில், பிரீமிய கட்டணம் அதிகரிக்கும். புதிய வாகனங்களுக்கு இது பொருந்தாது எனினும், அடுத்த புதுப்பித்தலின் போது, கடந்த காலத்தில் செய்யப்பட்ட விதிமுறை மீறல் புள்ளிகள் அடிப்படையில், பிரீமியம் நிர்ணயிக்கப்படும்
.பரிந்துரை
இதன் மூலம் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் குறையும்.இவ்வாறு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.இதில், இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், நமது வாகனத்தை நாம் ஓட்டாமல், டிரைவரோ அல்லது தெரிந்தவர்களோ ஓட்டி, விதிமுறை மீறல்களுக்கு ஆளானாலும், வாகனத்தின் உரிமையாளர்களே அதிக பிரீமிய தொகை செலுத்த நேரிடும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|